உடன் வர மறுப்பு தெரிவித்த காதலன்.. விபரீத முடிவெடுத்த காதலி.. திருச்சி அண்ணா பல்கலைக்கழக விடுதியில் பேரதிர்ச்சி.!!
in Trichy girl attempt suicide police investigation going on
தமிழகத்தின் தருமபுரி மாவட்டத்தை சார்ந்தவர் ஜெயவேல். இவரது மகளின் பெயர் லோகேஸ்வரி (வயது 20). இவர் திருச்சி மாவட்டத்தில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் அமைப்பியல் (சிவில்) துறையில் இறுதி வருடம் பயின்று வருகிறார்.
இவருடன் தருமபுரியை சார்ந்த மாணவரொருவரும் படித்து வந்த நிலையில்., இவர்களுக்குள் ஏற்பட்ட பழக்கமானது பின்னாளில் காதலாக மாறியுள்ளது. இவர்கள் இருவரும் தங்களின் காதலை பெற்றோரிடம் தெரிவித்த நிலையில்., இரு வீட்டாரும் இவர்களின் காதலுக்கு பச்சை கொடி காட்டியுள்ளனர்.
இதனையடுத்து இவர்கள் இருவருக்கும் நிச்சயதார்த்தமும் செய்து வைத்து., இருவருக்கும் கல்லூரி படிப்பு நிறைவுபெற்றவுடன் திருமணம் செய்து வைப்பதாக முடிவு செய்து வைத்துள்ளனர்.
இந்த தருணத்தில்., லோகேஸ்வரி தனது தந்தை ஜெயவேலிற்கு அதிகளவு கடன் சுமை உள்ளதை அறிந்து மனஉளைச்சலில் இருந்து வந்துள்ளார். இதன் காரணமாக கல்வி உதவித்தொகை பெற்று படிப்பினை தொடர முடிவு செய்துள்ளார்.
சம்பவத்தன்று உதவித்தொகை தொடர்பான விண்ணப்ப மனுவினை அளிக்க கல்லூரி அலுவலகத்திற்கு சென்ற நிலையில்., தனது காதலனையும் துணைக்கு அழைத்துள்ளார். காதலியுடன் செல்ல காதலர் மறுப்பு தெரிவித்துள்ளார்.
தந்தையின் கடன் சுமை பிரச்சனையில் மனவருத்தத்திற்கு உள்ளாகியிருந்த லோகேஸ்வரி., காதலன் உடன் வர மறுப்பு தெரிவித்ததற்கு கடுமையான அளவு மனமுடைந்து காணப்பட்டுள்ளார். இதனையடுத்து நேற்றிரவு இவரின் விடுதிக்கு சென்று மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
இவரின் உடலை கண்ட சக மாணவிகள் அலறவே., இது தொடர்பாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் லோகேஸ்வரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
in Trichy girl attempt suicide police investigation going on