அடுத்தடுத்து மின்சாரம் தாக்கி ஒரே குடும்பத்தை சார்ந்த நபர்கள் பரிதாப பலி.! திருச்சியில் பெரும் சோகம்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் திருச்சி மாவட்டத்தில் உள்ள இ.பி சாலை அண்ணாநகர் பகுதியில் இருக்கும் வேதாத்திரி நகரினை சார்ந்தவர் தச்சு தொழிலாளி சீனிவாசன். இவரது மகனின் பெயர் செந்தில். இவர்கள் இருவரும் நேற்று காலையில் தச்சு பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர். 

இந்த சமயத்தில்., எதிர்பாராத விதமாக இருவரின் மீதும் மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக உயிரிழந்த நிலையில்., இவர்களின் அலறல் சத்தம் கேட்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து பார்க்கையில் விபரீதம் புரிந்துள்ளது. 

trichy electirc shock attack,

இதனையடுத்து இது தொடர்பாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு., சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் இருவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும்., இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில்., திருச்சி - மணப்பாறையில் இதனைப்போன்ற அடுத்த துயரம் அரங்கேறி பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

திருச்சி - மணப்பாறை நெடுஞ்சாலையில் இருக்கும் நாவலூர் கொட்டப்பட்டு அருகேயுள்ள கீழக்காடு பகுதியில் ராமமூர்த்தி என்பவருக்கு சொந்தமாக வயல் உள்ளது. இந்த வயலின் வழியாக மின்சார தேவைக்காக அரசு மின்சார கம்பங்கள் இருக்கிறது. 

trichy electirc shock attack,

இந்த நிலையில்., இன்று மின்சார கம்பி எதிர்பாராத விதமாக அறுந்து விழவே., இதனை அறியாத ராமமூர்த்தி மற்றும் அவரின் குடும்பத்தை சார்ந்த 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும்., வயலுக்கு உரம் வைக்க சென்ற மூவரும் பரிதாபமாக பலியானது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த விபத்தில் ராமமூர்த்தி மற்றும் அவரது தாயார் ஒப்பாயி அம்மாள்., ராமமூர்த்தியின் மகன் குணசேகரன் ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விஷயம் குறித்த தகவலறிந்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in trichy family members died due to electric attack


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->