போதை கும்பலிடம் இருந்து காதலியை காக்க காதலன் செய்த செயல்.. திருச்சியில் பெரும் சோகம்...!!
in trichy drug gang through boy in kollidam river missing
தமிழகத்தின் திருச்சி மாவட்டத்தில் உள்ள அண்ணா பொறியியல் கல்லூரியில் பயின்று வரும் துறையூர் பகுதியை சார்ந்தவர் ஜீவித். இவர் தனது காதலியுடன் அங்குள்ள சமயபுரம் சுங்கச்சாவடி அருகேயுள்ள கொள்ளிடம் ஆற்றுப்பாலத்தின் கீழே இருந்து பேசிக்கொண்டு இருந்தனர்.
இந்த சமயத்தில்., அங்கு மது அருந்திக்கொண்டு - கஞ்சா போதையை தலைகேற்றிக்கொண்டு இருந்த ஐவர் கொண்ட கும்பலானது காதல் ஜோடியை மிரட்டவே., காதலருடன் வந்திருந்த பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றுள்ளது. இதனை தட்டிக்கேட்ட காதலன்., காதலியை பத்திரப்படுத்துவதற்கு அங்கிருந்து தப்பி செல்ல கூறியதை அடுத்து., காதலி அங்கிருந்து தப்பி சென்று உதவி கேட்க சென்றுள்ளார்.
இதனால் கடுமையான ஆத்திரத்துக்கு உள்ளான போதை கும்பலானது ஜீவித்தை அடித்து நொறுக்கி., வெள்ளம் சென்று கொண்டு இருந்த ஆற்றில் வீசியுள்ளது. மேலும்., கொள்ளிடம் ஆற்றில் 14 ஆயிரம் கனஅடி நீர் சென்று கொண்டு இருந்த நிலையில்., நீரின் வேகத்தில் இழுத்து செல்லப்பட்டு மாயமாகியுள்ளார்.
கொடூரன்களின் பிடியில் இருந்து தப்பித்த பெண்ணை கண்டு அதிர்ச்சியடைந்து., அவர்களிடம் விசாரணை மேற்கொண்ட அவ்வழியாக வந்த மாட்டுவண்டி காரர்கள்., போதை கும்பலை சார்ந்த இருவரை மீட்டு காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். இதனைத்தொடர்ந்து காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில்.,
கைதான இருவரும் அங்குள்ள மண்ணச்சநல்லூர் அருகில் இருக்கும் தேவிமங்கலம் பகுதியை சார்ந்த கலையரசன் மற்றும் புள்ளம்பாடி அருகேயுள்ள மணக்காடு பகுதியை சார்ந்த கோகுல் என்பதும் தெரியவந்ததை அடுத்து., இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மூவரையும் தேடி வருகின்றனர். மாணவரை தேடும் பணியானது தற்போது வரை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
in trichy drug gang through boy in kollidam river missing