காதல் தோல்வியா? ஒருதலைக்காதலா?.. விஷயம் தெரிந்த பெண் மருத்துவரின் விபரீத முடிவு...!! - Seithipunal
Seithipunal


திருச்சி மாவட்டத்தில் உள்ள தாராநல்லூர் விசுவாஸ் நகர் பகுதியை சார்ந்தவர் ஜெயச்சந்திரன். இவர் காந்திமார்க்கெட் பகுதியில் அரிசி வியாபாரம் செய்து வரும் நிலையில், இவரது மகளின் பெயர் புனிதவதி (வயது 31). இவர் சென்னையில் உள்ள மருத்துவக்கல்லூரியில் எம்.பி.பி.எஸ் பட்டம் பயின்று முடித்துள்ள நிலையில், திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார். 

இந்த நேரத்தில், நேற்று புனிதவதியின் அறையில் எந்தவிதமான சத்தமின்றி இருந்துள்ளது. மகள் நீண்ட நேரமாக வெளியே வராமல் இருந்த நிலையில், இதனால் சந்தேகமடைந்த ஜெயச்சந்திரன் உள்ளே சென்று பார்க்கையில் புனிதவதி அறையில் மயக்கமடைந்த நிலையில் இருந்துள்ளார். மேலும், புனிதவதியின் அருகேயே மருந்து பாட்டிலும், ஊசியும் இருந்துள்ளது. 

இதனையடுத்து புனிதவதி தனக்கு தானே விஷம் போட்டு தற்கொலை செய்திருக்கலாம் என்று கருதி, அங்குள்ள திருச்சி மருத்துவமனைக்கு புனிதவதியை கொண்டு சென்றுள்ளனர். மருத்துவமனையில் புனிதவதியை பரிசோதனை செய்த மருத்துவர்கள், இவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டார் என்று தெரிவித்துள்ளனர். இது குடும்பத்தாருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், இந்த விஷயம் தொடர்பான தகவலை அறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை மேற்கொண்டனர். இது தொடர்பான முதற்கட்ட விசாரணையில் புனிதவதி காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பான விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

In Trichy doctor suicide attempt


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->