சீரழிந்த கல்லூரி மாணவர்கள்.! ரூ.200 க்கு போதை ஊசியை செலுத்தி போதையில் மிதந்த கொடூரம்.!! வெளியான அதிர்ச்சி தகவல்., ஆடிப்போன திருச்சி மாநகரம்.!!
in trichy college students using injection of drugs in her body police investigation going on
இன்றளவில் உள்ள பெரும்பாலான இளைஞர்கள் தங்களின் வாழ்க்கையை சீரழிக்கும் வகையில் மது பழக்கத்திற்கும்., புகைப் பழக்கத்துக்கும்., அதற்கு அதிகமான கஞ்சா., ஹெராயின் போன்ற கொடிய நோய்களை வரவழைக்கும் மற்றும் நொடிப்பொழுதில் உயிரை மாய்க்கும் கொடிய போதைப் பழக்கத்திற்கு ஆளாகி உள்ளனர்.
போதை பழக்கங்கள் உலகம் முழுவதும் உள்ள இளைஞர்களிடம் வளம் வந்து கொண்டு இருக்கும் நிலையில்., இந்த போதை பழக்கத்திற்கு பழகிய நபர்களாலும் உபயோகப்படுத்தப்பட்டு., பிற நபர்களையும் போதை பழக்கத்திற்கு உட்படுத்தும் பிரச்சனை பெரும் பிரச்சனையை ஏற்படுத்தி வரும் நிலையில்., தமிழகத்தில் அதுபோன்ற சம்பவம் நடந்துள்ளது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தேசியக் கல்லூரியின் விடுதிக்கு எதிர்ப்புறமாக மாணவர்கள் காரினை சுற்றி கும்பலாக இருந்ததை கண்காணிப்பு பணிக்கு சென்ற காவல்துறையினர் கண்டுள்ளனர். இவர்களின் செயல்பாடுகளை கண்டு சந்தேகித்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சோதனை செய்ததில்., காரில் அரங்கேறிய கொடூரத்தை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
அந்த காரில் இருந்த நபர்கள் போதை ஊசி வைத்திருந்ததும்., அதனை மாணவர்களுக்கு செலுத்தி ஒரு மாணவருக்கு 100 ரூபாய்க்கு அந்த போதை ஊசியை செலுத்தி அவர்கள் வசூல் செய்தது தெரியவந்தது. இதனையடுத்து காரில் இருந்த திருச்சி ராஜா காலனி பகுதியை சேர்ந்த காஜா என்ற 22 வயது இளைஞன்., திருச்சிக்கு ஆண்டாள் வீதியைச் சேர்ந்த வினோத் என்ற 25 வயதுடைய இளைஞன்., திருச்சி டோல்கேட் சேதுராம பிள்ளை காலனியை சேர்ந்த உதயசந்திரன் என்ற 26 வயது இளைஞனை கைது செய்தனர்.
அவர்களை கைது செய்த காவல்துறை அதிகாரிகள் காரினை சோதனை செய்தபோது போதை ஊசிக்கு தேவையான மருந்துகள் மற்றும் ஊசிகள் ஆகியவை கைப்பற்றினர்., இவர்களை கைது செய்த பின்னர் மேற்கொண்ட விசாரணையில்., அங்கு உள்ள விடுதியில் தங்கியிருக்கும் மாணவர்கள் தேவைப்படும் போது அவர்களின் எண்ணிற்கு தொடர்பு கொண்டு அவர்களை சம்பவ இடத்திற்கு வரச்சொல்லி பின்னர் போதை ஊசியை ஏற்றுக்கொண்டுள்ளனர்.
அவ்வாறு செலுத்தப்படும் போதை ஊசி ஒரு தடவைக்கு சுமார் 200 ரூபாய் வசூல் செய்வதும்., இது போன்று பல மாணவர்கள் போதைக்கு அடிமையாகி இவர்களிடம் போதை ஊசி செலுத்தி வந்ததும் தெரியவந்துள்ளது. இதுதொடர்பான விசாரணையை காவல்துறையினர் தீவிரப்படுத்தியுள்ளனர். இந்த சம்பவமானது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
in trichy college students using injection of drugs in her body police investigation going on