6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.. கைதான 22 வயது காமுகன்.!!
in Trichy child sexual torture police arrest culprit
திருச்சி மாவட்டத்தில் உள்ள கீழ்தேவதானம் பகுதியை சார்ந்தவன் செல்வமணி (வயது 22). இப்பகுதியில் பெற்றோருடன் வசித்து வரும் ஆறு வயதுடைய சிறுமி இருந்துள்ளார். சிறுமி அவ்வப்போது தனது வீட்டிற்கு அருகில் விளையாடிக்கொண்டு இருப்பார்.
இந்த நிலையில், சம்பவத்தன்று சிறுமி வீட்டிற்கு வெளியே விளையாடிக்கொண்டு இருந்துள்ளார். சிறுமியை கவனித்த காமுகன் செல்வமணி தனது இல்லத்தின் பின் புறம் அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளான்.
இதனால் சிறுமி அதிகளவு சத்தத்துடன் அழவே, பயந்து சிறுமியை அப்படியே விட்டுவிட்டு சென்றுள்ளான். இதனையடுத்து சிறுமி தனது தாயிடம் அழுதுகொண்டே சென்று நடந்ததை கூறியுள்ளார்.
இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாயார் அங்குள்ள மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது குறித்த புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு செல்வமணியை கைது செய்தனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
in Trichy child sexual torture police arrest culprit