16 வயது சிறுவனை அடித்து கொலை செய்த நண்பர்கள்.. விசாரணையில் பகீர்..!! திருச்சியில் பேரதிர்ச்சி.!!
in trichy child killed police investigation culprit arrest
திருச்சி மாவட்டத்தில் உள்ள அறியாமங்கலம் பெரியார் நகர் பகுதியை சார்ந்தவர் அலியார். இவரது மனைவியின் பெயர் மெகர் நிஷா. இவர்கள் இருவருக்கும் அப்துல் வாகித் (வயது 12) என்ற மகன் உள்ளார். இவர் அங்குள்ள பள்ளியில் ஆறாம் வகுப்பு பயின்று வரும் நிலையில்., இவருக்கு படிப்பு சரியாக வராததால் காரணமாக வீட்டில் இருந்து வந்துள்ளார்.
இந்த நிலையில்., கடந்த சில நாட்களுக்கு முன்னதாக வெளியே சென்ற அப்துல் வாகித் வீடு திரும்பாத நிலையில்., இவனை காணாது தேடி அலைந்த பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்ததை அடுத்து., இது குறித்த புகாரை ஏற்ற காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நேரத்தில்., அங்குள்ள அறியாமங்கலம் குப்பை கிடங்கில் சிறுவனின் பிணமொன்று இருப்பதாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து மேற்கொண்ட சோதனையில்., மாயமான சிறுவன் அப்துல் வாகித் பிணமாக இருப்பதும்., இவனது உடலில் காயங்கள் இருப்பதையும் கண்டறிந்துள்ளனர். இதனைத்தொடர்ந்து சிறுவனை கொலை செய்ததை உறுதி செய்ததை அடுத்து., சிறுவன் உடல் அழுகி இருந்ததால்., சிறுவன் கொலை செய்யப்பட்டு 3 நாட்கள் ஆகியிருக்கலாம் என்று சந்தேகித்தனர்.
இதனைதொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேகத்தின் பேரில் இளவரசன் (வயது 18)., சரவணன் (வயது 19)., லோகேஷ் (வயது 16)., வீராசாமி (வயது 16) ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்ட நிலையில்., இதே பகுதியை சார்ந்த முத்துக்குமார் (வயது 22) என்பவர் கொலை செய்தது தெரியவந்தது. இது தொடர்பான முதற்கட்ட விசாரணையில் பகீர் தகவலானது வெளிவந்துள்ளது.
அப்துல் வாகித் படிப்பை பாதியில் விட்டுவிட்ட நிலையில்., முத்துகுமாருடன் நல்ல நட்புடன் பழகி வந்துள்ளார். முத்துக்குமார் பன்றி வளர்ப்பு தொழில் செய்து வந்த நிலையில்., முத்துக்குமாருக்கும் - இதே பகுதியை சார்ந்த சிலருக்கும் தொழில்போட்டி இருந்த நிலையில்., அப்துல் வாகித் எதிராளியுடனும் நெருங்கி பழகி வந்துள்ளார். இது முத்துக்குமாருக்கு கடுமையான ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும்., இரும்பு திருடி விற்பனை செய்யும் பணத்தை பங்கு பிரிப்பதில் முத்துக்குமாருக்கு - அப்துலிற்கும் ஏற்கனவே வாய்த்தகராறு இருந்து வந்துள்ளது. இதனால் ஏற்பட்ட தகராறில் அப்துல் கொலை செய்யப்பட்டதும்., உடலை அங்குள்ள குப்பை கிடங்கு தண்ணீர் தொட்டியில் மூடியதும் தெரியவந்துள்ளது. இதனைத்தொடர்ந்து முத்துக்குமார் தலைமறைவான நிலையில்., காவல் துறையினர் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
in trichy child killed police investigation culprit arrest