விஷம் குடித்து கைதிகள் தற்கொலை?...! திருச்சி மத்திய சிறையில் பரபரப்பு.!!
in trichy central jail prison man strike
தமிழகத்தின் திருச்சி மாவட்டத்தில் உள்ள மத்திய சிறையில் வெளிநாட்டு அகதிகளுக்கான சிறப்பு முகமானது உள்ளது. இந்த முகாமில் இலங்கை தமிழர்கள் சுமார் 38 பேர் மற்றும் வங்காளதேச நாட்டினை சார்ந்தவர்கள்., சீனர்கள் போன்ற பிற நாட்டை சார்ந்தவர்கள் 70 பேர் உள்ளனர். இவர்கள் அனைவரும் விசா காலம் நிறைவடைந்ததும் தமிழகத்தில் தங்கியிருந்தவர்கள் மற்றும் போலி பாஸ்போர்ட் மூலமாக வந்தவர்கள்., போதை பொருள் கடத்தல் கும்பல் போன்ற வழக்குகளில் தொடர்புடைய கைதிகள் ஆவார்கள்.
இவர்களின் தண்டனை காலமானது நிறைவேற்றப்பட்டதும் அவர்களின் நாட்டிற்கு அதிகாரிகள் மூலமாக அனுப்பி வைக்கப்படுவது வழக்கம். இந்த நிலையில்., கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக தண்டனை காலம் நிறைவுபெற்ற 10 வங்கதேசத்து நாட்டினர் மற்றும் நைஜீரிய நாட்டினர் அனுப்பி வைக்கப்பட்ட நிலையில்., அங்கிருந்த பிற 46 கைதிகள் தங்களையும் தண்டனைக்காலம் நிறைவடைந்ததால் சொந்த நாட்டிற்கு அனுப்பி வைக்க முறையிட்டுள்ளனர்.
இவர்களை அனுப்புவதில் இருந்த காரணத்தின் காரணமாக பிரச்சனை எழவே., இலங்கை தமிழர்கள் மற்றும் வங்காளதேச நாட்டினர்., சீனா மற்றும் பல்கேரிய நாட்டினை சார்ந்த கைதிகள் தங்களை விடுதலை செய்ய கூறி திடீர் உண்ணாவிரத போராட்டத்தினை மேற்கொண்டனர். இதனால் நேற்று மதியம் முதல் உணவு சாப்பிட மறுப்பு தெரிவித்தனர்.
இதனைத்தொடர்ந்து அதிகாரிகள் சமரசம் பேசியும்., கைதிகள் தங்களின் நிலைப்பாட்டில் முனைப்புடன் இருப்பதால் போராட்டம் தற்போதும் தொடர்ந்து வருகிறது. இந்த நிலையில்., நேற்று 20 கைதிகள் விஷம் குடித்ததாகவும்., இவர்களின் உடல்நலம் பாதிக்கப்பட்டு அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பான விசாரணையில் காவல் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
in trichy central jail prison man strike