திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் நடப்பது என்ன?..! கொந்தளிக்கும் மாணவ - மாணவியர்கள்.. தற்கொலை... பகீர் வாக்குமூலம்..!!
in trichy bharathidasan university student attempt suicide
திருச்சி மாவட்டத்திலுள்ள காஜாமலை பகுதியில் செயல்பட்டு வரும் பாரதிதாசன் பல்கலைக்கழக வளாகம் செயல்பட்டு வருகிறது. இந்த பல்கலைக்கழகத்தில் பயின்று வரும் மாணவி ஒருவர் திடீரென தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
இவரை கண்டு பதறிப்போன சக மாணவிகள்., மாணவியை மீட்டு அங்குள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். இவருக்கு மருத்துவமனையில் தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில்., இது குறித்து தகவலறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
மேலும்., மாணவியின் தற்கொலையை அறிந்த மாணவர்கள் மற்றும் சக மாணவிகள் மருத்துவமனைக்கு முன்பாக கூடி., மானைவியின் தற்கொலைக்கு பேராசிரியர் காரணம் என்று தெரிவிக்கப்பட்டதை அடுத்து., காவல் துறையினர் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இது குறித்த விசாரணையில்., தற்கொலைக்கு முயன்ற மாணவி நிலவியல் துறை இரண்டாம் வருடம் படித்து வருவதும்., கடந்த வாரம் நடைபெற்ற மாத தேர்வின் போது., மாணவிகளுக்கு முன்னதாக ஆசிரியர் ஒருவர் முன்னதாகவே வினாத்தாள்களை வெளியிட்டடுள்ளார்.
இதனை அறிந்த நிலவியல் துறையின் பொறுப்பு துணைத்தலைவர் சக்திவேல்., குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியருக்கு எதிரான நடவடிக்கையை மேற்கொண்டு., மாணவிகளிடம் விசாரணை மேற்கொண்டு., அவர்களின் அலைபேசியை வாங்கியுள்ளார்.
மாணவிகளின் அலைபேசியில் அவர்களுடைய ஆண் நண்பர்களுடன் எடுத்த புகைப்படத்தை கண்ட கொடூரன்., தனது மடிக்கணினியில் பதிவேற்றி மாணவிகளை மிரட்டி வந்துள்ளான். மேலும்., தனிமனித சுதந்திரத்தில் அதிகளவு தலையிட்டு வருவதாகவும்., நாங்கள் குறித்த அவதூறு பரப்பி வருவதாகவும்., இதனைப்போன்ற பல மிரட்டல் விடுத்துள்ளதாகவும் சக்திவேல் குறித்து புகார்கள் எழுந்துள்ளது.
இதனால் பயந்துபோன பல மாணவிகள் பல முறை தற்கொலைக்கு முயன்றுள்ளதாகவும்., மாணவிகள் குறித்து தொடர்ந்து அவதூறு பரப்பி வந்ததால்., எனது பெற்றோரிடம் இது குறித்து அவதூறு பரப்பிடுவதாக கூறியதால் நான் தற்கொலைக்கு முயன்றுள்ளேன் என்று மாணவி வாக்குமூலம் அளித்துள்ளார். இது தொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
in trichy bharathidasan university student attempt suicide