14 வயதாகும் சிறுமியை மகள் என்றும் பாராது கற்பழித்து., கொலை மிரட்டல் விட்ட கொடூர தந்தை.! அதிர்ந்துபோன திருச்சி.!! - Seithipunal
Seithipunal


திருச்சி மாவட்டத்தில் உள்ள மணப்பாறையை அடுத்துள்ள வையம்பட்டி புதுமணியாரம்பட்டி பகுதியை சார்ந்தவன் கட்டிட தொழிலாளியாக பணியாற்றி வருகிறான். இவனுக்கு திருமணம் முடிந்து மனைவி மற்றும் ஆண் குழந்தை மற்றும் பெண் குழந்தை உள்ளனர். 

இவன் கட்டிட தொழிலாளியாக பணியாற்றி வரும் சூழ்நிலையில்., மது அருந்தும் பழக்கத்தை வைத்துள்ளான். இந்த நிலையில்., தினமும் வீட்டிற்கு மது அருந்திவிட்டு வீட்டிற்கு வரும் பழக்கத்தை வைத்துள்ளான். 

இந்த சமயத்தில் கடந்த 30 ம் தேதியன்று அதிகளவு மதுவை அருந்திவிட்டு வீட்டில் இருந்த தனது 14 வயது மகளை பலவந்தமாக கற்பழித்துள்ளான். தனது மகளை சீரழித்து  பின்னர் அங்கிருந்து கொடூரன் தப்பி சென்றுள்ளான். 

இந்த நிலையில்., வீட்டிற்கு வந்த தாய் மற்றும் சகோதரனிடம் விஷயத்தை கூறி கதறியழுத சிறுமியின் கதறலை கேட்டு அதிர்ச்சியான தாயார்., இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இவரின் புகாரை ஏற்ற காவல் துரையினர் தப்பியோடிய கொடூரனை தேடி வருகின்றனர். 

இந்த நேரத்தில்., தனது மனைவிக்கு தொடர்பு கொண்ட கொடூரன் இது குறித்து வெளியே கூறினால் கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளதை அடுத்து., இது தொடர்பான விசாரணையில் காவல் துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். 

இந்த சம்பவமானது அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில்., பாதிக்கப்பட்ட சிறுமி அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in trichy a girl rapped by her father police investigation going on


கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?




Seithipunal
--> -->