ஒரே குடும்பத்தை சார்ந்த மூவர் தற்கொலை செய்துகொண்ட சோகம்.. திருப்பூரில் பரிதாபம்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஜெய்நகர் பகுதியில் உள்ள வீட்டில் ஒரே குடும்பத்தை சார்ந்த 3 பேர் வசித்து வந்துள்ளனர். இதில் தாத்தா, பேரன் மற்றும் மகள் ஆகியோர் வசித்து வந்துள்ளனர். 

இந்த நிலையில், இவர்கள் மூவரும் நேற்று திடீரென தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இவர்களின் இல்லக்கதவு காலை நீண்ட நேரம் ஆகியும் திறக்கப்படாமல் இருப்பதை அக்கம் பக்கத்தினர் கண்டுள்ளனர். 

இதனால் சந்தேகம் அடைந்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் கதவை உடைத்து உள்ளே சென்று சோதனை செய்துள்ளனர். 

இதில் வீட்டில் வசித்து வந்த மூவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. இதனையடுத்து இவர்களின் உடலை மீட்ட காவல் துறையினர், பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். 

இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இவர்கள் எதற்க்காக? தற்கொலை செய்துகொண்டனர்? குடும்ப பிரச்சனையா? அல்லது வேறு ஏதும் பிரச்சனையா? என்பது தொடர்பாகவும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்கொலை செய்து கொண்டதில், சிறுவன் 11 ஆம் வகுப்பு மாணவன் என்பதும் தெரியவந்துள்ளது. ந்த சமபவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in Tirupur family members suicide


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->