பச்சிளம் குழந்தையை துடிதுடிக்க கொலை செய்து, தாய் எடுத்த விபரீத முடிவு.. குடும்ப தகராறில் அரங்கேறிய பெரும் சோகம்.!!
in tiruppur mother killed child and attempt suicide
மதுரை மாவட்டத்தில் உள்ள வாடிப்பட்டி பகுதியை சார்ந்தவர் பிரபாகரன் (வயது 31). இவர் அவினாசியை அடுத்துள்ள பெரியயிபாளையம் ஜெ.ஜெ.நகரில் தங்கியிருந்து, அங்குள்ள பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.
இவரது மனைவியின் பெயர் துர்கா (வயது 28), இவர்கள் இருவருக்கும் திருமணம் முடிந்து 3 வருடங்கள் ஆகிறது. இவர்கள் இருவருக்கும் தற்போது ஒரு வயதுடைய ரித்திக் என்ற ஆண் குழந்தை இருக்கிறது.
பிரபாகரன் நேற்று வழக்கம்போல பணிக்கு சென்றுவிட்ட நிலையில், வீட்டில் துர்கா மற்றும் அவரது குழந்தை தனியாக இருந்துள்ளனர். இந்த நிலையில், துர்கா தனது குழந்தையை கொலை செய்து, தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
வீட்டின் வாயிலை திறந்து வைத்தபடியே துர்கா தூக்கில் தொங்கிய நிலையில், அக்கம் பக்கத்தினர் எதிர்ச்சியாக இதனை கண்டு பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர். பின்னர் இது தொடர்பாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். மேலும், கணவருக்கும் விஷயத்தை தெரியப்படுத்தியுள்ளனர்.
தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் தாய் மற்றும் குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அவினாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், துர்கா மற்றும் பிரபாகரன் இடையே அவ்வப்போது குடும்ப தகராறு ஏற்பட்டு வருவது தொடர்கதையாகியுள்ளதாகவும், இதனால் மனமுடைந்த துர்கா குழந்தையை கொலை செய்து தற்கொலை செய்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
in tiruppur mother killed child and attempt suicide