14 வயது கள்ளக்காதலனுடன் உல்லாசம்.. உடல்நிலையால் மறுப்பு தெரிவித்த பெண்ணை கொடூர கொலை செய்த சிறுவன்.. திருப்பூரில் பேரதிர்ச்சி.!! - Seithipunal
Seithipunal


இந்தியாவின் பீகார் மாநிலத்தில் உள்ள ஷம்புவதிவில் அராசி பகுதியை சார்ந்தவர் மிதுன் தாதியா.. இவரது மனைவியின் பெயர் ஷீலா தேவி. இவர்கள் இருவருக்கும் திருமணம் முடிந்து கோமன்குமார், சத்தியம் குமார் என்ற இரண்டு மகன்களும், துளசி குமாரி என்ற மகளும் இருக்கின்றனர். இவர்கள் தமிழகத்திற்கு பணிக்காக வந்த நிலையில், குடும்பத்துடன் திருப்பூரில் தங்கியிருந்து அங்குள்ள பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர். 

இந்த நிலையில், கடந்த பொங்கல் பண்டிகையையொட்டி மிதுன் தாதியாவிற்கும் - ஷீலாவிற்கும் இடையே ஏற்பட்ட குடும்ப பிரச்சனையின் காரணமாக மிதுன் தனது குழந்தைகளை அழைத்து கொண்டு பீகாருக்கு சென்றுள்ளார். ஷீலா கணவருடன் செல்லாது திருப்பூரிலேயே தங்கிய நிலையில், இவரது வீட்டின் கதவு நீண்டநேரமாக திறக்கப்படாமல் இருந்துள்ளது. மேலும், காலையிலேயே பணிக்கு செல்லும் இவரது இல்லத்தின் கதவு திறக்காமல் இருப்பதை கண்டு அக்கம் பக்கத்தினர் சந்தேகித்துள்ளனர்.

இதனையடுத்து வீட்டின் கதவை திறந்து பார்க்கையில் ஷீலா பிணமாக கிடந்துள்ளார். ஷீலாவின் உடலை கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர், இது தொடர்பாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் ஷீலாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், ஷீலா கழுத்து நெரித்து கொலை செய்ப்பட்டுள்ளதற்கான அடையாளம் இருந்துள்ளது.

இதன் பின்னர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்ட நிலையில், ஷீலா தேவிக்கும் - அங்குள்ள கொங்குநகர் பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வந்த பீகார் மாநிலத்தை சார்ந்த 14 வயது சிறுவனிற்கும் இடையே பழக்கம் இருந்தது தெரியவந்துள்ளது. மேலும், இவர்களின் பழக்கமானது பின்னாளில் கள்ளக்காதலாக மாறியதை அடுத்து, கணவர் பணிக்கு சென்றபின்னர் கள்ளக்காதல் ஜோடி உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர். 

இந்த விஷயத்தை அறிந்த கணவர் ஷீலாவை கண்டித்தும் பலனில்லாததால், தனது குழந்தையை அழைத்து கொண்டு மிதுன் தாதியா பீகாருக்கு சென்றுள்ளார். ஷீலா மட்டும் திருப்பூரிலேயே தங்கிய நிலையில், இதனை சாதகமாக வைத்து கள்ளக்காதல் ஜோடி உல்லாச வாழ்க்கையை அனுபவித்து வந்துள்ளது. இந்த நிலையில், நேற்று முன்தினம் ஷீலாவின் இல்லத்திற்கு சென்ற சிறுவன் உல்லாசத்திற்கு அழைப்பு விடுத்துள்ளான். இதற்கு ஷீலா மறுப்பு தெரிவித்ததால், சிறுவன் ஆத்திரமடைந்து ஷீலாவை கொலை செய்தது தெரியவந்துள்ளது. சிறுவனை கைது செய்து மேற்கொண்ட விசாரணையில் மேற்கூறிய தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in tiruppur illegal affair girl murder 14 year affair boy arrest


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->