சிறுமியை காரில் கடத்தி பலாத்காரம் செய்ய முயற்சித்த காமுகன்.! இரத்த காயத்துடன் தப்பிய மாணவி.. திருப்பூரில் பேரதிர்ச்சி.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மங்களம் இச்சிப்பட்டி பகுதியை சார்ந்தவர் சுப்பிரமணி சரவணகுமார் (வயது 34). இவர் தொழிலதிபராகவும்., பிரின்டிங் கம்பெனியும் நடத்தி வருகிறார். இவர் சோமனுர் பகுதியில் பணப்பரிவர்த்தனை நிறுவனமும் நடத்தி வந்துள்ளார். இந்த நிறுவனத்தில் சோமனுர் பகுதியை சார்ந்த 19 வயதுடைய கல்லூரி மாணவி பகுதி நேரத்தில் பணியாற்றி வந்துள்ளார். 

இம்மாணவி சம்பவத்தன்று வழக்கம்போல பணிக்கு சென்ற நிலையில்., மாலை நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் சுமார் 8 மணியளவில் மகளிர் தொடர்பு கொண்ட நேரத்தில்., அலுவலகத்தில் இருந்து புறப்பட்டு வீட்டிற்கு வந்து கொண்டு இருப்பதாக தெரிவித்துள்ளார். ஆனால் இரவு வெகுநேரமாகியும் வீட்டிக்கு வரவில்லை. 

அதிக நேரம் ஆகிவிட்டதால் மாணவியின் தந்தை சிறுமிக்கு தொடர்பு கொள்ளவே., மாணவி அழைப்பை எடுக்கவில்லை. இதனைத்தொடர்ந்து மாணவி பணியாற்றி வந்த நிறுவனத்திற்கு சென்று பார்க்கையில்., நிருவனம் பூட்டப்பட்டு இருந்ததை அடுத்து., மகளை அங்குள்ள பகுதிகளில் தேடி அலைந்துள்ளார். இதனால் கடுமையான பதற்றத்திற்கு குடும்பத்தினர் உள்ளாகி இருந்தனர். 

இந்த நேரத்தில்., மாணவியை இரவு சுமார் 10.30 மணியளவில் ஆட்டோ ஓட்டுநர் அழைத்து கொண்டு வந்துள்ளார். மாணவியின் உடைகள் கிழிந்த நிலையில்., உடலில் காயத்துடன் வந்துள்ளார். இதனை கண்டு பெரும் அதிர்ச்சிக்கு உள்ளன பெற்றோர் மகளிடம் நடந்தது குறித்து கேட்கையில் பெரும் அதிர்ச்சி காத்திருந்துள்ளது. 

sexual harassment, sexual abuse, sexual torture,

இது தொடர்பாக மாணவி தெரிவித்த சமயத்தில்., நான் பணியை முடித்துவிட்டு வீட்டிற்கு கிளம்பிய சமயத்தில்., நிறுவனத்தின் உரிமையாளர் சுப்பிரமணி காரில் அழைத்து சென்று விடுவதாக கூறினான். இதனை நம்பி காரில் சென்ற சமயத்தில்., அவனது இல்லத்திற்கு அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்தான். இதனால் பதறிப்போன நான் வீட்டீர்கள் இருந்து தப்பியோடி வந்தேன். 

இருப்பினும் என்னை விடாது காரில் துரத்தி வந்தது கொண்டு இருந்தான். பயத்தின் காரணமாக இவனிடம் இருந்து தப்பிக்க பள்ளத்தில் குதித்து முட்புறத்தில் மாட்டிக்கொண்டேன். என்னை அங்கும் இங்கும் தேடி பார்த்துவிட்டு நான் இல்லை என்று நினைத்து சென்றுவிட்டான். சாலையில் செய்வதறியாது அழுதபடி நின்ற எனக்கு ஆட்டோ ஓட்டுநர் விஷயத்தை கேட்டறிந்து வீட்டிற்கு அழைத்து வந்தார் என்று தெரிவித்துள்ளார். 

இதனைக்கேட்டு கடும் அதிர்ச்சிக்கு உள்ளான பெற்றோர் அங்குள்ள காவல் நிலையத்தில் இது தொடர்பாக புகார் அளித்தனர். இது குறித்த புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து., காம கொடூரன் சுப்பிரமணி சரவணகுமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in tiruppur girl sexual harassment police arrest business man


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->