டிக் டாக்கால் சீரழிந்த வாழ்க்கை.. கண்கண்ட பின் மர்டர் பிளான் செய்த பெண்மணி.. பகீர் ஆடியோ.!!
in tic tok girl plan to murder spoil his life
தேனி மாவட்டத்தில் உள்ள கொடுவிலார்பட்டி பகுதியில் உள்ள நாகலாபுரம் பகுதியை சார்ந்தவர் சுகந்தி. இவர் டிக் டாக்கிற்கு அடிமையாகியிருந்த நிலையில், இவரது செயல்பாடுகள் பிடிக்காததால் கணவர் பிரிந்து சென்றுள்ளார்.
கணவரை பிரிந்து வாழ்ந்து வரும் சுகந்திக்கு பலருடன் பழக்கம் ஏற்பட்ட நிலையில், தினம்தோறும் இவரது டிக் டாக் அட்டகாசமானது அதிகரித்து வந்துள்ளது. மேலும், சுகந்தியின் இது போன்ற நடவடிக்கையால் நாகலாபுரம் ஊருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது.
இவரை வைத்து பிற பெண்களையும் ஏளனமாக அனைவரும் பேசி வருவதால், ஊர்மக்கள் ஒன்று சேர்ந்து சுகந்தி மற்றும் அவரது சகோதரியை ஊரினை விட்டு வெளியேற்றியுள்ளனர்.
இதன்பின்னர் தனது நிலைக்கு டிக் டாக் செயலியில் பழகிய இருவர் காரணம் என்று கூறி தனது ஆண் நபருடன் சேர்ந்து கூலிப்படையை ஏவி கொலை செய்ய திட்டமிட்ட உரையாடல் பதிவு டிக் டாக் செயலியின் மூலமாகவே வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், டிக் டாக் செயலியால் பல பிரச்சனைகள் நடந்து வருவது குறிப்பிடதக்கது.
Tamil online news Today News in Tamil
English Summary
in tic tok girl plan to murder spoil his life