13 வயது மாணவியை சீரழித்து 9 மாத கர்ப்பிணியாக மாற்றிய 63 வயது கொடூரன்.! திருவண்ணாமலையில் பெரும் சோகம்.!!
in thriuvannamalai girl sexual harassment police investigation going on
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செய்யாறு அடுத்துள்ள கிராமத்தை சார்ந்த கட்டிட தொழிலாளியின் 13 வயதுடைய மகள் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். கட்டிட தொழிலாளியின் மனைவி அங்குள்ள கோவிலில் துப்புரவு பணி செய்து வருகிறார்.
அவருக்கு உதவியாக அந்த மாணவியும் உடன் சென்று வருவார். அந்த கோவில் நிர்வாக குழு உறுப்பினராக இருப்பவர் நடராஜன் (வயது 63). இவர் கூட்டுறவு கடன் சங்கத்தில் செயலாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
நடராஜனின் வீட்டு அருகே., அந்த மாணவி படிக்கும் பள்ளி உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அந்த மாணவி நடராஜனின் வீட்டிற்கு அடிக்கடி சென்று வருவார். நடராஜனும் அந்த மாணவிக்கு தேவையான பொருட்கள் வாங்கிக் கொடுத்துள்ளார்.
இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட நடராஜன்., பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து உள்ளார். மேலும் வாய்ப்பு கிடைக்கும் சமயத்தில்., பலமுறை பள்ளி மாணவியை பலாத்காரம் செய்துள்ளார்.
இந்நிலையில்., கடந்த சில வாரங்களுக்கு முன்பு மாணவிக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. அவரை தனியார் மருத்துவமனைக்கு பெற்றோர்கள் அழைத்துச் சென்றனர்.
அப்போது அந்த மாணவியை பரிசோதித்த மருத்துவர்கள்., சிறுமி 9 மாதம் கர்ப்பமாக இருப்பதாக கூறியுள்ளனர். இதைக்கேட்டு பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இது குறித்து அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அவர்களின் புகாரின்பேரில் போக்சோ சட்டத்தின்கீழ் நடராஜனை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
in thriuvannamalai girl sexual harassment police investigation going on