என்னை காதலி.. இல்லையென்றால் கொலை செய்துவிடுவேன்.. ஆசிரியைக்கு காதல் மிரட்டல்... தூத்துக்குடியில் பரபரப்பு.!!
in thoothukudi youngster arrest due to love torture
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சாத்தான்குளம் தச்சமொழி நாடார் தெருப்பகுதியை சார்ந்தவர் பிச்சை. இவரது மனைவியின் பெயர் செல்வி (வயது 49), இவரது மகளான அஜந்தா. இவர் அங்குள்ள மேல்நிலைப்பள்ளியில் தற்காலிக ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.
இதே பகுதியை சார்ந்த ஞானராஜ் என்பவரின் மகன் செல்வகுமார் (வயது 32). இவன் மீன் வியாபாரியாக பணியாற்றி வருகிறான். இந்த நிலையில், செல்வகுமார் அஜந்தாவை ஒருதலையாக காதலித்து வந்துள்ளதாக தெரியவருகிறது.
இவன் அஜந்தாவிடம் தனது காதலை தெரிவித்த நிலையில், அவர் காதலை ஏற்க மறுப்பு தெரிவித்துள்ளர். இதனால் செல்வராஜ் அஜந்தாவிற்கு காதல் தொல்லை கொடுத்து வந்துள்ளான். இதனால் குறிப்பிட்ட சமயத்திற்கு அமைதியாக இருந்த அஜந்தா, தனது பெற்றோரிடம் விஷயத்தை தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து பெற்றோர்கள் செல்வகுமாரை அழைத்து கண்டித்த நிலையில், ஆத்திரமடைந்த செல்வகுமார் அஜந்தாவை தனக்கு திருமணம் செய்து வைக்கவில்லை என்றால் கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டியுள்ளான்.
இதனால் பயந்துபோன அஜந்தா மற்றும் அவரது பெற்றோர், இது குறித்து அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இவர்களின் புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து செல்வகுமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
in thoothukudi youngster arrest due to love torture