ஊருக்கு பைத்தியக்காரன் வேஷம்.. அரங்கேறிய பாலியல் படுகொலைகள்.. தூத்துக்குடியில் பேரதிர்ச்சி சம்பவம்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வடக்கு முத்தலபுரம் பகுதியை சார்ந்தவர் அருள்ராஜ். இவன் அப்பகுதியில் நல்ல மனிதர் போல காட்டிக்கொண்டு உடையணிந்து பாவனை செய்து வந்த அந்நிலையில்., இவனது செயல்கள் அனைத்தும் மனநோயாளியை போல இருந்துள்ளது. இதனால் இவன் செய்யும் தவறுகளை அப்பகுதி மக்கள் பெரிதாக எடுத்துக்கொள்ளது இருந்து வந்துள்ளனர். 

இந்த சமயத்தில்., இதே பகுதியை சார்ந்த உள்ளாட்சி தேர்தல் வேட்பாளரின் உறவுக்கார பெண்ணின் 6 வயதுடைய மகன் மாயமாகியுள்ளான். இந்த சிறுவனுடன் விளையாடிக்கொண்டு இருந்த சிறுவர்கள் மேற்கூறிய அருள்ராஜ் சிறுவனை அழைத்து சென்றுள்ளதாக தெரிவித்துள்ளனர். இதனையடுத்து இது தொடர்பாக காவல் துறையினருக்கு தெரிவிக்கப்பட்டது. 

சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில் தன்னை பின் தொடர்ந்து வந்ததால் ஆத்திரமடைந்து காலால் மிதித்தேன். இதனால் சிறுவன் உயிரிழந்துவிட்டான் என்று கூறியதையே திருப்பி திருப்பி கூறி பைத்தியக்காரனாக நடித்துள்ளேன். பின்னர் அதே பாணியில் சிறுவன் பிணம் இருக்கும் இடத்தையும் தெரிவித்துள்ளான்.  

sexual harassment, sexual torture, sexual abuse, rapped,

இதனையடுத்து காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்க்கையில் சிறுவனின் கழுத்தில் கத்தியால் அறுக்கப்பட்ட காயம் இருந்ததை அடுத்து காவல்துறையினருக்கு பெரும் சந்தேகம் ஏற்பட்டது. மேலும்., சிறுவனின் உறவினர்கள் அனைவரும் உள்ளாட்சித்தேர்தல் முன்விரோதம் காரணமாக சிறுவன் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். 

மருத்துவமனையில் மருத்துவர்கள் மேற்கொண்ட பிரேத பரிசோதனை அறிக்கையில்., சிறுவன் பாலியல் ரீதியாக துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து அருள்ராஜிடம் காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில் பைத்தியக்காரன் வேஷம் கலைந்தது. மேலும்., சிறுவனை கடத்தி சென்று பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயற்சித்த சமயத்தில் கத்தியதாகவும்., இதனால் கொலை அரங்கேறியதும் தெரியவந்துள்ளது. 

மேலும்.,  இதனைப்போன்று கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக 60 வயதுடைய மூதாட்டியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு கொலை செய்த விசாரணையின் போதே காவல் துறையினர் அருள்ராஜை சந்தேகத்தின் பேரில் விசாரணை செய்த சமயத்தில் மனநோயாளியாக காட்டிக்கொண்டதை அடுத்து எளிதாக தப்பித்துள்ளான். மேலும்., சொந்த ஊரிலும் பைத்தியக்காரன் போல சுற்றிக்கொண்டு பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in thoothukudi sexual torture and murder police investigation


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->