அரிவாளால் கேக் வெட்டி அல்டிமேட் அலப்பறை.. வலைவீசி தேடும் காவல்துறை.. வழுக்கி விழ பதறும் நெஞ்சங்கள்...!!
in thoothukudi rowdy birthday celebration police search for slip in bathroom
சென்னை நகரில் அரிவாள் மற்றும் கத்தியுடன் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடும் கலாச்சாரத்தை துவக்கிய ரவுடி பினுவை காவல் துறையினர் சிறப்பாக கவனித்ததற்கு பின்னர் தற்போது சர்க்கரை நோயின் காரணமாக அவதியுற்று வருகிறார்.
இந்நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக மதுரவாயல் பகுதியில் சட்டக்கல்லூரி மாணவர் மற்றும் அவரது நண்பர் வாளால் கேக் வெட்டி கொண்டாடியதை அடுத்து கைது செய்யப்பட்டனர்.
இது போன்ற தொடர் சம்பவங்கள் நடைபெற்று வரும் நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பண்டராம்பட்டி பகுதியில் துருப்பிடித்த இரும்பு வாளை வைத்து கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய தைரியசாலியை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
மேலும், சம்பவத்தன்று கேக் வெட்டி தனது கூட்டாளிகளுக்கு போதும் போதும் என்ற அளவிற்கு ஊட்டிவிட்டு, கொலை சம்பவத்துடன் தொடர்புடைய கானா பாடல் பின்னணியில் வீடியோ பதிவு செய்து சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளனர்.
இதனையடுத்து இது தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலானதை தொடர்ந்து, இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட காவல் துறையினர், இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் அனைவரும் பண்டராம்பட்டி பகுதியை சார்ந்தவர்கள் என்பதை உறுதி செய்தனர்.
மேலும், தூத்துக்குடியில் உள்ள முத்துகிருஷ்ணாபுரம் பகுதியில் கூலித்தொழிலாளியிடம் கத்தியுடன் வாலிபரை செய்த ரவுடி மோகன்ராஜ் மீது புகார் பெறப்பட்டு, காவல் துறையினர் துரத்தி செல்கையில் எதிர்பாராது வழுக்கி விழுந்து வலது காலின் முட்டியை உடைத்துக்கொண்டார்.
இவரை மனிதாபிமானத்தோடு மீட்ட காவல் துறையினர் அங்குள்ள மருத்துவமனையில் அனுமதி செய்து பாவப்பட்ட ரவுடியை பராமரித்து வருகின்றனர். இந்த நிலையில், மோகன்ராஜ் மற்றும் அவரது கூட்டாளிகள் ஓடுவார்களா? கால் இடறி விழுவர்களா? என்று மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துகொண்டு உள்ளனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
in thoothukudi rowdy birthday celebration police search for slip in bathroom