கையிலும் காசில்லை. தாயின் உடலை வைத்து என செய்ய..!! மகனின் கண்ணீர் கடலில் இறுதி காரியமாக நடந்த பெரும் சோகம்.!!
in thoothukudi mother trowed govt dust pin due to no money
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தனசேகரன் நகரில் உள்ள பகுதியில் துப்புரவு பணியாளர்கள் குப்பைத்தொட்டி இருக்கும் குப்பையை அகற்றிக்கொண்டு இருந்தனர். இந்த சமயத்தில்., அங்குள்ள ஒரு குப்பை தொட்டியில் பெண்ணின் பிணம் ஒன்று இருந்துள்ளது. இதனை கண்டு அதிர்ச்சியான துப்புரவு பணியாளர்கள் அதிர்ச்சியடைந்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் உடனடியாக பெண்ணின் உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில்., இது குறித்து விசாரணை மேற்கொள்ள துவங்கினர். அந்த விசாரணையில்., தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தனசேகரன் பகுதியை சார்ந்த தம்பதியினர் நாராயணசாமி - வசந்தி.
இவர்களின் மகனின் பெயர் முத்துலட்சுமணன். நாராயணசாமி புரோகிதராக பணியாற்றி வந்த நிலையில்., கடந்த சில வருடத்திற்கு முன்னதாக நாராயணசாமி குடும்பத்தை பிரிந்து சென்ற நிலையில்., சென்னையில் உள்ள ஆசிரமத்தில் தங்கியிருக்கிறார். இதற்குப்பின் வசந்தி உடல் நலக்குறைவால் படுத்த படுக்கையாகவே., அவரது உடல் நலம் பாதிக்கப்பட்ட பின்னரில் இருந்து முத்துலட்சுமணன் கவனித்து வந்துள்ளார். இவருக்கு வருமானமும் சரி வர இல்லை.
முத்துவுக்கு வயது 29 ஆகும் நிலையில் புரோகிதர் தொழில் வந்த ரூ.1 இலட்சம் பணத்தை மருத்துவ செலவிற்கு செலவழித்த நிலையில்., மேற்கொண்டு செலவு செய்யவும் பணம் இல்லாமல் தவித்துள்ளார். கடனும் வாங்க வழியில்லாமல் இருந்து வந்த நிலையில்., கடந்த திங்கட்கிழமை தாயார் இருந்துள்ளார். சொந்தக்காரர்களும் இல்லை - உடன் பிறந்தோரும் இல்லை என்ற நிலையில்., தாயின் சடலத்தை வைத்து செய்வதறியாது திகைத்துள்ளார்.
பின்னர் மனதை கல்லாக்கிக்கொண்டு தாயை குளிக்க வைத்து., பொட்டு மற்றும் சேலை உடுத்தி அங்குள்ள குப்பை தொட்டியில் வைத்துள்ளார். இவ்வாறு வீசினால் நகராட்சி ஊழியர்கள் உடலை அடக்கம் செய்துவிடுவார்கள் என்று எண்ணி இதனை செய்துள்ளதாக காவல் துறையினரின் விசாரணையில் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து வசந்தியின் உடலை பிரேத பரிசோதனை செய்த மருத்துவர்கள் பின்னர் காவல் துறையினரின் முன்னிலையில் உடலை ஒப்படைத்தனர். பின்னர் இவர்களின் சமூகத்தை சார்ந்த நபர்களின் முன்னிலையில் உடலை ஒப்படைத்து இறுதி சடங்குகள் நிறைவு பெற்றது. இந்த சம்பவமானது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
in thoothukudi mother trowed govt dust pin due to no money