எனது நண்பனால் எங்களின் குடும்பத்தில் விரிசல்.. கண்ணீருடன் ஆடியோ பதிவு செய்து தற்கொலை செய்து கொண்ட சோகம்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஆறுமுகநேரி ராஜமண்ணியபுரம் பகுதியை சார்ந்தவர் மகேஷ் (வயது 43). இவர் தனியார் பேருந்தில் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவியின் பெயர் அருணா. இவர்கள் இருவருக்கும் இரண்டு மகன்கள் உள்ளனர். கணவன் - மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சனை அடிக்கடி நடந்து வந்துள்ளது. 

இந்த நிலையில், மனைவியை கடந்த 15 நாட்களுக்கு முன்னதாக தனது மனைவியை விட்டுவிட்டு தனது தாயார் புஷ்பம் என்பவருடன் வசித்து வந்துள்ளார். நேற்று முன்தினத்தின் போது தாயிடம் தனது மகன்களை பார்த்து வருவதாக கூறிவிட்டு இல்லத்தில் இருந்து புறப்பட்டு சென்றுள்ளார். 

கடுமையான மனஉளைச்சலுடன் கிளம்பி சென்ற மகேஷ், சீனத்தோப்பு பகுதியில் வைத்து விஷம் குடித்துவிட்டதாக உறவினர் தெரிவித்துள்ளார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து மயக்க நிலையில் இருந்த மகேஷை மீட்டு திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே மகேஷ் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த விஷயம் தொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், மகேஷ் தற்கொலைக்கு முன்னதாக பதிவு செய்த ஆடியோ பதிவு கைப்பற்றப்பட்டுள்ளது. இது இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது. 

இது தொடர்பான ஆடியோ பதிவில், " நான் தான் மகேஷ். எனது ஆடியோ பதிவை வைத்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளிக்கிறேன். எனது மனைவியும், நானும் மகிழ்ச்சியுடன் குடும்பத்தை நடத்தி வந்தோம். 

எனது நண்பனால் எங்களின் வாழ்க்கை கேள்விக்குறியானது. என் நண்பன் எனக்கு செய்த மீளாத்துயரில் இருந்து தவிர்க்க வழிதெரியாமல் தற்கொலை செய்து கொள்கிறேன். எனது நண்பனின் மீது நடவடிக்கை எடுங்கள் என்று கூறி தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த விஷயம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in thoothukudi man suicide due to family collapse by friend


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->