கந்துவட்டிக்கு பணம் கொடுத்து., மிரட்டி அடித்தே கொலை செய்த கொடூரம்..!! தூத்துக்குடியில் பயங்கரம்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஏரல் அருகேயிருக்கும் சிறுதொண்டநல்லூர் மரைக்காயர் தெரு பகுதியை சார்ந்தவர் சாகுல் ஹமீது. இவர் பெயிண்டிங் ஒப்பந்த தொழில் செய்து வந்த நிலையில்., ஆழ்வார்திருநகர் பகுதியில் வட்டித்தொழில் செய்யும் கண்ணன் என்பவரிடம் ரூ.1 இலட்சம் கடனாக பெற்றுள்ளார். 

மேலும்., பெயிண்டிங் ஒப்பந்தம் பெற்றுள்ள இடத்தில் இருந்து வர வேண்டிய பணம் வராமல் இருந்துள்ளதால் வட்டிக்காட்ட இயலாமல் தவித்து வந்துள்ளான். மேலும்., பலமுறை வட்டிப்பணம் குறித்தும் கண்ணன் கேட்டு மிரட்டி வந்துள்ளார். இந்த நிலையில்., இறுதியாக ஏற்பட்ட வாக்குவாதம் இவர்களுக்குள் முற்றியதாக தெரிகிறது.

இதனால் ஆத்திரமடைந்த கண்ணன் தனது ஆதரவாளர் 8 பேருடன் சாகுல் ஹமீதை கடந்த 17 ஆம் தேதியன்று காரில் காதி சென்று., வட்டிக்கு வட்டி போட்டு 3 மடங்கு பணம் கேட்டு துன்புறுத்தி பலத்த காயமடைந்த நிலையில் வீட்ட்ற்கு கொண்டு வந்து விட்டுவிட்டு., வெறுமையான பத்திரத்தில் விரல் ரேகையையும் பெற்றுள்ளது.

உயிருக்கு போராடும் நிலையில் சாகுல் ஹமீது தூத்துக்குடி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில்., சிகிச்சை பலனில்லாது பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் கண்ணன் உள்ளிட்ட நான்கு பேரின் மீது வழக்குப்பதிவு செய்து  தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும்., பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in thoothukudi man murder for loan police investigation


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->