சிறுமி சித்ரவதை செய்து பாலியல் வன்கொடுமை.. நாடகக்காதலன் நண்பனுடன் அரங்கேற்றிய கொடூரம்..!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள உடன்குடி அருகேயிருக்கும் கிராமத்தினை சார்ந்த 17 வயதுடைய சிறுமி, திருப்பூரில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர் கடத்த சில நாட்களுக்கு முன்னதாக தனது தாயாரை காணுவதற்காக தனியாக புறப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில்., கடந்த 3 ஆம் தேதியன்று இரவு நேரத்தில் மயக்க நிலையில் சிறுமியை ஊருக்கு அழைத்து வந்த சிலர்., அவரது வீட்டு வாயிலின் முன்னதாக இறக்கிவிட்டு சென்றுள்ளனர். 

சிறுமியின் தலைமுடியானது வெட்டப்பட்டு., உடல்களில் நகத்தினால் ஆன கீறல்களும்., சிகிரெட் சூடும் இருந்துள்ளது. இதனை கண்டு பெரும் அதிர்ச்சிக்கு உள்ளான சிறுமியுடைய தந்தை அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு சிறுமியை அழைத்து சென்று அனுமதித்துள்ளார். அங்கு முதலுதவி சிகிச்சையானது அளிக்கப்பட்டு., பின்னர் மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டுள்ளார்.  

sexual harassment, sexual abuse, sexual torture, rapped,

இதனையடுத்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை அங்குள்ள மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனை ஏற்ற காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில்., திருச்செந்தூரை அடுத்துள்ள எம்.தளவாய்புரம் பகுதியை சார்ந்தவர் முருகப்பெருமான். இவரது மகனின் பெயர் ஐயப்பன் (வயது 20). இவன் திருச்செந்தூரில் இருக்கும் உணவகத்தில் தொழிலாளியாக பணி செய்து வருகிறான். 

அங்குள்ள உடன்குடி அருகேயுள்ள சாதராகோன்விளை பகுதியை சார்ந்தவர் நடராஜன். இவரது மகனின் பெயர் மணிகண்டன் (வயது 23). இவன் ஆட்டோ ஓட்டுநராக பணியாற்றி வருகிறான். இவன்கள் இருவரும் நண்பர்களாக இருந்து வந்த நிலையில்., சிறுமி உடன்குடியில் இருக்கும் அலைபேசி கடையில் பணியாற்றி வந்துள்ளார். இந்த நேரத்தில்., ஐயப்பனிற்கும் - சிறுமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு காதலாக மலர்ந்துள்ளது. 

sexual harassment, sexual abuse, sexual torture, rapped, drama love,

இதனையடுத்து இருவரும் காதலித்து வந்த நிலையில்., சிறுமியின் தாயார் திருப்பூரில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். சிறுமியின் தந்தை சொந்த ஊரில் வசித்து வருகிறார். சம்பவத்தன்று சிறுமி தனது தாயாரை பார்க்க ஆசைப்பட்டு தந்தையிடம் திருப்பூர் செல்வதாக கூறி சென்ற நிலையில்., சிறுமியுடன் ஐயப்பனும் சென்றுள்ளான். 

பின்னர் அங்குள்ள வாடகை இல்லத்தில் சிறுமியை அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளான். சிறுமியை ஐயப்பன் தனது நண்பனான மணிகண்டனிற்கும் விருந்தாக்க ஆசைப்பட்டுள்ளான். இந்த விசயத்திற்கு சிறுமி மறுப்பு தெரிவிக்கவே., சிறுமியை இரண்டு காம கொடூரன்களும் அடித்து உதைத்து கொடுமைப்படுத்தியுள்ளனர். மேலும்., சிறுமியின் உடலில் சிகிரெட்டால் சூடு வைத்து., தலைமுடியினை வெட்டி சிதரவதையும் செய்துள்ளனர். 

sexual harassment, sexual abuse, sexual torture, rapped,

இதனால் பலத்த உடல் இன்னல்களை சந்தித்த சிறுமி மயங்கி விழவே., அதிர்ச்சியடைந்த இருவரும் சிறுமியை கடந்த 3 ஆம் தேதி சிறுமியின் சொந்த கிராமத்திற்கு அழைத்து சென்றுவிட்டு வந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து மணிகண்டன் மற்றும் ஐயப்பனை கைது செய்த காவல் துறையினர் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும்., பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in thoothukudi girl rapped by drama lover and his friend police investigation going on


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->