போதையில் வீட்டிற்கு வந்த கணவனால் அரங்கேறிய பெரும் சோகம்..! காவல் நிலையத்தில் கதறிய மனைவி..!! - Seithipunal
Seithipunal


இன்று பெண்களுக்கு எதிரான குற்றங்கள் சமூகத்தில் மட்டுமல்ல, வீட்டிற்கு உள்ளேயும் நடக்கின்றது. பல துயர சம்பவங்களுக்கு காரணமாக இருப்பது யார் என்று பார்த்தால், அவர்களது வீட்டில் இருக்கும் உறவினர்கள் தான். பல இடங்களில் கணவன், மனைவி தகராறு கடைசியில் மரணத்தில் சென்று முடிகிறது.

அப்படிப்பட்ட ஒரு சம்பவத்தை தான் இன்று நாம் பார்க்கப் போகின்றோம். நாசரேத் அருகே இருக்கும் வெள்ளமடம் இசக்கி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த சின்னத்தம்பி என்பவரின் மகன் நடராஜன் கூலித் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார்.

கணவன் மனைவி சண்டை, husband wife problem,

இவருக்கு அந்தோணி புஷ்பம் என்ற மனைவி இருக்கிறார். நடராஜன் குடித்துவிட்டு வந்து அடிக்கடி தன்னுடைய மனைவியிடம் தகராறு செய்துள்ளார். அதுபோலதான் நேற்றும் கணவன் மனைவி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் குடிபோதையில் இருந்த நடராஜன் மிகவும் ஆத்திரத்துடன் அவரது மனைவியே அவதூறாக பேசி, தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

இதன் காரணமாக மிகுந்த பீதியிலிருந்த நடராஜன் மனைவி நாசரேத் காவல் துறையினரிடம் தனது கணவன் பெயரில் புகார் பதிவு செய்துள்ளார். இந்த புகாரின் பேரில் காவல்துறையினர், வழக்குப்பதிவு செய்து கூலி தொழிலாளியான நாகராஜனை கைது செய்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in thoothukudi girl complaint police station for his husband torture


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->