சிறுமியை காதலித்து நாடகக்காதலால் ஏமாற்றி மிரட்டிய காமுகன்.. நண்பனுக்கும் வலைவிரித்த கொடூரம்.!! உடன்குடியில் பேரதிர்ச்சி..!!
In thoothukudi drama lover culprit arrest by police
தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூரை அடுத்துள்ள உடன்குடி பகுதியை சார்ந்தவர் தினேஷ். இப்பகுதியில் 17 வயதுடைய மாணவி பெற்றோருடன் வசித்து வருகிறார்.
மாணவி அங்குள்ள கல்லூரியில் பயின்று வந்த நிலையில், மாணவியிடம் தினேஷ் சகோதரத்துவத்துடன் துவக்கத்தில் பழகி வந்துள்ளான். பின்னர் மாணவியை மெல்ல மெல்ல காதல் வலையில் நாடகக்காதலன் வீழ்ச்சியுள்ளான்.
இந்த நிலையில், காமுக எண்ணம் கொண்ட தினேஷ், மாணவியை தனிமையில் அழைத்து சென்று சில புகைப்படங்கள் எடுத்து வைத்ததாக தெரியவருகிறது. இதன்பின்னர் தினேஷின் நடவடிக்கை மாறவே, மாணவி தினேஷுடன் கொண்ட காதலை துண்டித்துள்ளார்.
காமுகன் தினேஷ் மாணவியை தொடர்ந்து மிரட்டி, எடுத்து வாய்த்த புகைப்படத்தை வைத்து மிரட்டல் விடுத்து வந்துள்ளான். மேலும், மாணவியின் புகைப்படத்தை ரவி என்பவனுக்கு அனுப்பி வைத்துள்ளான்.
இதனையடுத்து காமுகன் ரவியும் மாணவியிடம் தவறான நோக்கத்தோடு பேச துவங்கியுள்ளான். இதனையடுத்து இந்த விஷயம் தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவி தரப்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
In thoothukudi drama lover culprit arrest by police