மகளை கிணற்றில் தள்ளி மனமில்லாது காப்பாற்ற முயற்சித்தும் அரங்கேறிய பெரும் சோகம்.. விசாரணையில் கண்ணீர் துயரம்.!!
in Thoothukudi district child killed by father
தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி கடலையூர் தாமஸ் நகர் காலனி பகுதியை சார்ந்தவர் கருப்பசாமி. இவரது மகன் டேவி குமார் (வயது 36). இவர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் வாகனத்தை பதிவு செய்து வழங்கும் தரகராக பணியாற்றி வரும் நிலையில், இவரது மனைவியின் பெயர் மகாலட்சுமி (வயது 32).
இவர்கள் இருவருக்கும் ஷைனி ஜெயசத்யா (வயது 11) மற்றும் ஜெசிகா ராணி (வயது 9) என்ற இரண்டு மகள்கள் இருக்கின்றனர். இவர்கள் இருவரும் அங்குள்ள பள்ளியில் பயின்று வரும் நிலையில், டேவிக்கு வருமானம் இல்லாது இருந்துள்ளது. இதனால் பலரிடம் கடன் வாங்கி சிரமப்பட்ட நிலையில், கடனை திரும்பி செலுத்த இயலாது தவித்து வந்துள்ளார். இதனால் கடுமையான மனஉளைச்சலுக்கு உள்ளாகியுள்ளார்.
இந்நிலையில், கரோனா வைரஸ் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இதனால் குழந்தைகள் இருவரும் இல்லத்தில் இருந்துள்ளனர். தன் குழந்தைகளை அழைத்து கொண்டு மோட்டார் சைக்கிளில் பூப்பட்டு சென்ற நிலையில், விடுமுறையால் வீட்டிலேயே இருந்த குழந்தைகள் வெளியே மகிழ்ச்சியுடன் புறப்பட்டுள்ளனர்.
முக்கிய சாலைகளில் காவல் துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்ததால், இரயில்வே சுரங்கப்பாதையில் அழைத்து என்று தோட்ட கிணற்றுக்கு அளித்து சென்று குழந்தைகளை கிணற்றில் தள்ளி கொலை செய்துள்ளார். இருவரையும் மனமில்லாது கொலை செய்ய கிணற்றில் தூக்கி வீசி, பின்னர் குழந்தைகளின் கதறல் சத்தத்தை கேட்டு காப்பாற்ற முயற்சித்தும் பலனில்லாமல் போயுள்ளது.
பின்னர் கிணற்றில் இருந்து மேலே கயிறு மூலமாக ஏறி வந்து நண்பருக்கு தகவல் தெரிவித்துவிட்டு காட்டுப்பகுதியில் பதுங்கியுள்ளார். பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு படையினர் மற்றும் காவல் துறையினர் இருவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.பின்னர் இது குறித்து வழக்குப்பதிவு செய்து மேற்கொண்ட விசாரணையில், மேற்கூறிய தகவல் வெளிவந்தது. மேலும், தலைமறைவாக இருந்த டேவி குமார் கிராம நிர்வாக அலுவலர் முன்னிலையில் சரணடைந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
in Thoothukudi district child killed by father