தேநீர் குடிக்க சென்ற போது அரங்கேறிய பெரும் சோகம்.. துடிதுடித்து உயிரிழந்த அண்ணன் தம்பி.!!
in thoothukudi brothers died in accident
தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கயத்தாறு அருகேயுள்ள சவலப்பேரி பகுதியை சார்ந்தவர் திருப்பதி ராஜா (வயது 45). இவரது மனைவியின் பெயர் வசந்தி. இவரது மகன்களின் பெயர் ராஜேஷ் கண்ணன், சதீஷ் கண்ணன்.
இவர்கத்து உறவினரின் பெயர் ராஜகோபால் (வயது 32). இவருக்கு கடந்த ஒரு வருடத்திற்கு முன்னதாக திருமணம் நடைபெற்று முடிந்த நிலையில், இவரது மனைவியின் பெயர் பத்மா. இவர்களுக்கு கீர்த்தனா என்ற ஆறு மாத கைக்குழந்தை உள்ளது.
இந்நிலையில், திருப்பதி ராஜாவும் - ராஜகோபால் அண்ணன் தம்பி உறவினர்கள் ஆவார்கள். இவர்கள் இருவரும் நேற்று மதிய நேரத்தில், இருசக்கர வாகனத்தில் இரண்டு பெரும் சவலப்பேரி சாலையில் உள்ள தேநீர் கடைக்கு சென்றுள்ளனர்.
இந்த நேரத்தில், திருநெல்வேலியில் இருந்து விளாத்திகுளம் நோக்கி சென்ற அரசு பேருந்து, சாலையை கடக்க முயற்சித்த இருவரின் மீதும் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் இருவரும் பேருந்தின் சக்கரத்தில் சிக்கிக்கொண்டனர்.
இருவரும் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பலியான நிலையில், இதனை கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் இருவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
in thoothukudi brothers died in accident