என் குழந்தை மட்டும் இறந்துவிட்டது... நீ மட்டும் சந்தோசமாக இருக்கலாமா?..! தூத்துக்குடியில் பேரதிர்ச்சி.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மாப்பிள்ளையூரணி பூபாண்டிபுரம் பகுதியை சார்ந்தவர் செல்வராஜ் (வயது 28). இவரது மனைவியின் பெயர் நந்தினி (வயது 20). இவர்கள் இருவருக்கும் ஆறு மாதமாகும் செல்வகணேஷ் என்ற ஆண் குழந்தை உள்ள நிலையில்., செல்வராஜ் தூத்துக்குடி மாநகராட்சியில் துப்புரவு தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். 

கைக்குழந்தையோடு நந்தினி தனியாக இருக்க வேண்டாம் என்று கருதிய செல்வராஜ்., தனது மனைவி மற்றும் குழந்தையை அங்குள்ள முல்லை நகரில் இருக்கும் மாமியாரின் இல்லத்தில் விட்டுவிட்டு பணிக்கு சென்று பின்னர் மீண்டும் அழைத்து வருவதை வழக்கமாக வைத்துள்ளார். இந்த சமயத்தில் நேற்று மதியம் திடீரென வீட்டிற்கு வெளியே நந்தினி பதறியபடி ஓடி வந்தார். 

baby, baby died,

மேலும்., தனது குழந்தை கிணற்றில் விழுந்துவிட்டதாக கூறி கூச்சலிட்டதை அடுத்து., இது தொடர்பாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் கிணற்றில் இருந்து குழந்தையை பிணமாக மீட்டனர். குழந்தையின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து., இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்தனர். 

இந்த விசாரணையில்., நந்தினியின் தாயார் வசித்து வந்த வீட்டிற்கு அருகிலேயே இருக்கும் உறவுக்கார பெண்ணான தூத்துக்குடி எஸ்.எஸ்.மாணிக்கபுரம் பகுதியை சார்ந்த பஞ்சவர்ணம் (வயது 31) என்பவர் குழந்தையை கொலை செய்தது தெரியவந்தது. மேலும்., பஞ்சவர்ணத்திற்கு ஆறு மாத கைக்குழந்தை இருந்துள்ளது.

பஞ்சவர்ணத்தின் குழந்தைக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக பால் கொடுக்கும் போது புரையேறி இறந்துவிட்ட நிலையில்., பஞ்சவர்ணத்திற்கும் - அவரது கணவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து தனது தாயாரின் வீட்டில் இருந்த சமயத்தில்., குழந்தை இறந்த துக்கம் தாளாது மனநலம் பாதிக்கப்பட்டு இருந்துள்ளார். 

police, tamilnadu police, tn police investigation, tamilnadu police investigation,

இந்த தருணத்தில் நந்தினி தனது குழந்தையுடன் தாயரின் இல்லத்தில் இருக்கவே., குழந்தையை சிறிது நேரம் வைத்திருப்பதாக கூறி பஞ்சவர்ணம் வாங்கி செல்ல முயற்சித்துள்ளார். இதற்கு மறுப்பு தெரிவித்த நந்தினியிடம் இருந்து குழந்தையை வலுக்கட்டாயமாக வாங்கி சென்ற நேரத்தில் குழந்தை அழுதுள்ளது.

குழந்தையை வேகமாக கொண்டு சென்ற பஞ்சவர்ணம் அங்குள்ள கிணற்றில் குழந்தையை வீசி கொலை செய்துள்ளார். மேலும்., இது தொடர்பாக பஞ்சவர்ணத்திடம் விசாரித்த சமயத்தில் " எனது குழந்தை இறந்தபின்னர். இந்த குழந்தை எதற்கு? உயிருடன் இருக்க வேண்டும் " என்று கூறியுள்ளார். தற்போது பஞ்சவர்ணத்தை கைது செய்த காவல் துறையினர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in thoothukudi baby murder by woman personal avenges


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->