உயிர் போகும் இறுதி நேரத்திலும், மாணவிகளை காப்பாற்றிய ஆட்டோ ஓட்டுநர்.. ஆட்டோவிலேயே துடிதுடித்து உயிரிழந்த பரிதாபம்..!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டத்தை சார்ந்தவர் ராமலிங்கம். இவர் சொந்தமாக ஆட்டோ வைத்து பணியாற்றி வரும் நிலையில், பகல் வேளைகளில் அங்குள்ள பேருந்து நிறுத்தம், இரயில் நிலையங்களில் வரும் பயணிகளை ஏற்றி சவாரி செய்து வந்துள்ளார். 

பின்னர் மாலை மற்றும் காலை வேளைகளில் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து சென்றும், பின்னர் மீண்டும் வீட்டிற்கு அழைத்து வரும் பணியையும் செய்து வந்துள்ளார். இரவு 7 மணிமுதல் 8 மணிக்கு வீட்டிற்கு சென்றுவிடும் வழக்கமும், அனைவரிடமும் அன்பாகவே பழகி வந்துள்ளார். 

இதனால் இவரது ஆட்டோவில் பயணம் செய்யும் பள்ளி மாணவிகள், இவரை ஆட்டோ மாமா என்று அன்போடு அழைத்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று மாலை வழக்கம்போல இப்பகுதி குழந்தைகளை ஏற்றிக்கொண்டு வீட்டிற்கு வந்துள்ளார். 

இந்த நேரத்தில், ராமலிங்கத்துக்கு எதிர்பாராத விதமாக நெஞ்சுவலி ஏற்படவே, ஆட்டோவை ஓடிக்கொண்டு இருப்பதை சுதாரித்து, ஆட்டோவை சாலையோரம் நிறுத்தி மற்றொரு ஆட்டோவில் அவர்களை அனுப்பி வைத்துள்ளார். 

பின்னர் தனது ஆட்டோவை எடுத்து செல்ல முயற்சிக்கையில் கடுமையான நெஞ்சு வலி ஏற்பட்டு, ஆட்டோவிலேயே மயங்கி உயிரிழந்துள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் அவசர ஊர்தியினருக்கு தகவல் தெரிவித்தனர். 

அவசர ஊர்தியினர் முதலுதவி செய்தும் ராமலிங்கம் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இவரது இறப்பு செய்தியை அறிந்த மாணவிகள் மற்றும் குழந்தைகள் அழுதது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. மேலும், குழந்தைகளை தனது வாழ்க்கையின் இறுதி தருவாயிலும், சுதாரித்து காப்பாற்றியது அப்பதி மக்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in thoothukudi auto driver save child life died heart attack


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->