மூன்று வயது குழந்தையுடன் இரயில் முன்பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட தாய்..!! திருவாரூரில் சோக சம்பவம்..!!
in thiruvarur mother attempt suicide due to family problem
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கேக்கரை பகுதியை சார்ந்தவர் செல்வம் (வயது 38). இவர் கட்டிட தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவரது மனைவியின் பெயர் கோமதி (வயது 33). இவர்கள் இருவருக்கும் கடந்த ஒன்பது வருடங்களுக்கு முன்னதாக திருமணம் முடிந்து நாக ஸ்ரீ என்ற ஏழு வயதுடைய குழந்தையும்., நவி ஸ்ரீ என்ற மூன்று வயதுடைய குழந்தையும் உள்ளனர்.
இந்த நிலையில்., கணவன் - மனைவி வாழ்க்கை சந்தோசமாக சென்று கொண்டு இருந்த நிலையில்., இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. தினமும் நிம்மதி இல்லாமல் தவித்து வந்த கோமதி., தற்கொலை செய்து கொள்வதற்கு முடிவு செய்து குழந்தையுடன் தற்கொலை முடிவு எடுத்துள்ளார்.
கோமதியின் தற்கொலை முடிவின் படி இன்று அதிகாலையில் சுமார் 4 மணி சமயத்தில், கோமதியும் - அவரின் மகள் நவிஸ்ரீ ஆகியோர் அங்குள்ள தண்டவாள பகுதிக்கு வந்த நிலையில்., சென்னையில் இருந்து மன்னார்குடி செல்லும் மண்ணை அதிவிரைவு வண்டி வந்துள்ளது.
இதனை கண்ட கோமதி தனது குழந்தையுடன் இரயில் முன் குதித்து தற்கொலை செய்துகொண்டார். இந்த தற்கொலையில் இருவரும் சம்பவ இடத்திலேயே படுகாயமடைந்து பரிதாபமாக உயிரிழந்தனர். பின்னர் இது குறித்து இரயில் ஓட்டுநர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.
தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர்., இருவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில்., இது குறித்து விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவமானது அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
in thiruvarur mother attempt suicide due to family problem