இரண்டாவது மனைவிக்கு குழந்தை பிறந்ததால்., அவரின் மகள் மீது மோகம் கொண்ட கொடூரன்..! மனஉளைச்சலில் அரங்கேறிய விபரீதம்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் திருவாரூர் மாவட்டத்தில் இருக்கும் கிராமத்தில் வசித்து வரும் நபர் கூலித் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவருக்கு ஏற்கனவே திருமணமாகி இருந்த நிலையில்., இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார். 

இரண்டாவதாக திருமணம் செய்த பெண்ணிற்கு 17 வயதுடைய மகள் இருப்பதையும் அறிந்த நபர்., பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்ட நிலையில்., இவர்கள் இருவருக்கும் தற்போது குழந்தையொன்று பிறந்துள்ளது. 

இதனால் இரண்டாவது மனைவி தாம்பத்தியத்திற்கு மறுப்பு தெரிவித்து வந்த நிலையில்., இரண்டாவது மனைவியின் மகளை தன் மகள் என்று கருதாது அவ்வப்போது பாலியல் தொல்லை அளித்து வந்துள்ளான். 

sexual harassment, sexual abuse, sexual torture, பாலியல் வன்கொடுமை,

கடும் மன உளைச்சலில் சிறுமி இருந்து வந்த நிலையில்., இவனின் தொல்லைகள் தாங்காது சிறுமி தற்கொலை செய்ய முடிவு செய்துள்ளார். இதனையடுத்து வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்த பெண்ணை மீட்ட அக்கம் பக்கத்தினர் அங்குள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். 

இதனைத்தொடர்ந்து இது குறித்த தகவலறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை மேற்கொண்ட நிலையில் பகீர் தகவலானது வெளிவந்துள்ளது. தனது வாக்குமூலமாக காவல் துறையினரிடம் "எனது அம்மா தற்போது திருமணம் செய்துள்ள நபர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரிவித்துள்ளார். 

suicide attempt,

மேலும்., இதனால் யாரிடம் இதனை கூறுவது என்று தெரியாமல் கடும் மன உளைச்சலால் அவதியுற்று வந்ததும்., இறுதியாக தற்கொலைக்கு முடிவு செய்து தற்கொலை செய்து கொண்டேன்.. என்னை எனது உறவினர்கள் எப்படியோ காப்பாற்றிவிட்டார்கள் என்று கண்ணீருடன் தெரிவித்துள்ளார். 

இதனை அறிந்து அதிர்ச்சியான காவல் துறையினர்., இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு கூலித் தொழிலாளியை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும்., பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in thiruvarur father rapped daughter police arrest


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->