விண்ணுலக பயணத்திலும் இணைபிரியாத தம்பதி.. திருவாரூரில் கண்ணீர் செய்தி.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள முத்துப்பேட்டையை அடுத்துள்ள ஓவருர் கிராமத்தில் வசித்து வந்தவர் நாகராஜ் (வயது 60). இவரது மனைவியன் பெயர் இந்திரா (வயது 55). இவர்கள் இருவருக்கும் திருமணம் முடிந்து குழந்தைகள் இல்லை. 

இவர்கள் இருவரும் திருமணம் முடிந்த துவக்கத்தில் இருந்தே இணைபிரியாத தம்பதிகளாக வாழ்ந்து வந்த நிலையில்., இவர்களது உறவினர்களின் இல்ல சுப மற்றும் துக்க நிகழ்ச்சிகளுக்கு ஜோடியாக சென்று வருவதை வழக்கமாக வைத்துள்ளனர். 

இந்த நிலையில்., நேற்று முன்தினத்தின் போது நள்ளிரவு நேரத்தில் இந்திராவுக்கு நெஞ்சு வலியானது ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த நாகராஜ் மற்றும் அவரது உறவினர்கள் சேர்ந்து அவசர ஊர்தியின் மூலமாக அங்குள்ள திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு இந்திராவை கொண்டு சென்றனர்.

Hospital, மருத்துவமனை,

மருத்துவமனையில் இந்திராவுக்கு அவசர சிகிச்சை அளித்து வந்த நிலையில்., மேல் சிகிச்சைக்காக திருவாரூரில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். மருத்துவமனையில் மருத்துவர்கள் அளித்து வந்த சிகிச்சை பலனின்றி இந்திரா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

இந்த செய்தியை கேட்டு கடுமையான அதிர்ச்சிக்கு உள்ளான நாகராஜ் மருத்துவமனையிலேயே மயங்கி விழவே., இதனால் பதறிப்போன உறவினர்கள் மீண்டும் மருத்துவரை அழைத்து செய்த சோதனையில் நாகராஜ் உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். 

இதனையடுத்து இவர்கள் இருவரின் உடலையும் சொந்த ஊருக்கு கொண்டு வந்து அனைவரும் அஞ்சலி செலுத்தினர். இந்த விஷயம் பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in thiruvarur couple died naturally


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->