அதிவேக பயணம்.. எதிரே வந்த லாரி.! துள்ளத்துடிக்க நடந்த கொடூரம்.!  - Seithipunal
Seithipunal


திருவண்ணாமலை மாவட்டத்தில் செங்கம் அகரம் என்ற பகுதி இருக்கின்றது. இப்பகுதியில் யுவராஜ், ஏழுமலை மற்றும் ஜனா ஆகியோர் வசித்து வந்துள்ளனர். 

விழுப்புரம் மாவட்டம் அருகே செஞ்சிக்கு அருகே இவர்கள் மேல்பாப்பம்பட்டியில் 3 பேரும் இருசக்கர வாகனத்தில் பயணித்து உள்ளனர். 

அப்போது எதிரே அதிவேகத்தில் வந்து கொண்டிருந்த லாரியின் மீது மோதியுள்ளனர். எனவே, சம்பவ இடத்திலேயே யுவராஜ் மற்றும் ஏழுமலை உயிரிழந்துவிட்டனர். ஜனா படுகாயம் அடைந்துள்ளார்.

இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் விரைந்து வந்து இருவரின் உடலையும் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

படுகாயமடைந்த ஜனாவை சிகிச்சைக்காக உடனடியாக பொது மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்த சம்பவமானது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர்., விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in thiruvannamalai youngster struggled in accident and died


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->