மனைவிக்கும் மாமனாருக்கும் இடையே இருந்த பிரச்சனையால்., கணவன் எடுத்த விபரீத முடிவு.!! இறுதியில் அரங்கேறிய சோகம்.!! - Seithipunal
Seithipunal


திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பகுதியில் வசித்து வருபவர் கார்த்திகேயன் (வயது 30). இவரது தந்தையின் பெயர் தனபால். கார்த்திகேயனுக்கு திருமணம் முடிந்து ஒரு மூன்றுமாதமான குழந்தை உள்ளது. கார்த்திகேயனின் மனைவியின் பெயர் ராஜேஸ்வரி. 

இந்த நிலையில்., கார்த்திகேயன் மற்றும் ராஜேஸ்வரிக்கும் பிறந்த குழந்தையை தனது தந்தைக்கும் ராஜேஸ்வரிக்கும் இருந்த பழக்கத்தால் பிறந்துள்ளதாக கார்த்திகேயன் சந்தேகம் அடைந்திருந்ததை தொடர்ந்து., இவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. 

இந்த பிரச்சனையின் காரணமாக இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததை அடுத்து., தனபால் இதில் தலையிட்டு பேசி சமரசம் செய்து வந்துள்ளார். குழந்தையின் மீதான சந்தேகம் நீங்காததை அடுத்து., குழந்தையை கொடூர முறையில் கார்த்திகேயன் கொலை செய்துள்ளான். 

இதனையடுத்து இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் கார்த்திகேயனை சிறையில் அடைத்தனர். இந்த நிலையில்., ராஜேஸ்வரி தனது தாயாரின் இல்லத்திற்க்கே மீண்டும் சென்றுவிட்ட நிலையில்., தனது மகனை தனபால் ஜாமினில் எடுத்துள்ளார். 

இந்த சமயத்தில் வீட்டின் வாயிலில் உறங்கிக்கொண்டு இருந்த தனபாலை., கடும் மன உளைச்சலுக்கு சந்தேக நோயால் ஆளாகியிருந்த கார்த்திகேயன் குத்தி கொலை செய்து., பின்னர் காவல் நிலையத்திற்கு சென்று தனது தந்தையை கொலை செய்ததாக சரணடைந்துள்ளார். 

இந்த தகவலை அறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று சோதிக்கையில்., தனபால் இரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்துள்ளார். இதனையடுத்து கார்த்திகேயனை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் சோகத்தையும்., பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in thiruvannamalai son killed her dad due to illegal affair doubt


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->