பணி முடிந்து வீடு திரும்பிய புதுமாப்பிள்ளை.! வழியில் வந்த எமன்.!  - Seithipunal
Seithipunal


திருவண்ணாமலை மாவட்டத்தில் கீழ்பென்னாத்தூர் வேடந்தாங்கலை சேர்ந்த ஏழுமலை. இவரது மகன் அன்பரசன் (வயது 20) ஸ்ரீபெரும்புதூரில் இருக்கும் தனியார் கம்பெனி ஒன்றில் வேலை செய்து வந்துள்ளார். 

இவருக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தான் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த நிலையில் நேற்று காலை அன்பரசன் அவரது நண்பர் பூவரசன்(23) உடன் சேர்ந்து பைக்கில் வேலைக்கு சென்றுள்ளார். அப்போது இரவு பைக்கில் வீடு திரும்பியுள்ளனர். 

கூழமந்தல் அடுத்த வெள்ளாமலை என்ற இடத்தில் வந்த பொழுது எதிரே வந்த ஆட்டோவின் மீது பைக் வேகமாக மோதியுள்ளது. இதனால் பைக்கில் இருந்து தூக்கி வீசப்பட்டு அன்பரசன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். பூவரசன் படுகாயம் அடைந்தார்.

இதுகுறித்து தகவலறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பூவரசன், ஆட்டோ டிரைவர் உத்தரமேரூரை சேர்ந்த சூர்யா (38) ஆகியோரை மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

பைக் மீது லோடு ஆட்டோ மோதி புதுமாப்பிள்ளை பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விஷயம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in thiruvannamalai new married man died in accident


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->