பிரியாணி கேட்டு வாய்த்தகராறு.. படுக்கப்போட்டு வாயிலேயே வெட்டிய சோகம்.. திருவண்ணாமலையில் பரபரப்பு.!! - Seithipunal
Seithipunal


திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வேட்டவலம் செல்லங்குப்பம் புதுகாலணியில் வசித்து வரும் நபரின் பெயர் கோவிந்தன். இவரது மனைவியின் பெயர் மகாலட்சுமி (வயது 32). இவரது குழந்தைக்கு காதுகுத்தும் நிகழ்ச்சியானது நேற்று முன்தினத்தின் போது நடைபெற்றுள்ளது. 

இந்த நிகழ்ச்சியில் பிரியாணி ஏற்பாடு செய்து வைக்கப்பட்ட நிலையில், இந்த ஊரை சார்ந்த ஏழுமலை என்பவர் தனக்கு பிரியாணி பார்சலில் வேண்டும் என்று மகாலட்சுமியின் உறவினரான சுகுமாரிடம் தகராறு செய்து வந்துள்ளார். 

இதனையடுத்து ஏழுமலையை அங்கிருந்த நபர்கள் சமாதானம் செய்து அனுப்பி வைக்கவே, ஏழுமலையிடம் நியாயம் கேட்கும் பொருட்டு மகாலட்சுமியுடைய உறவினர்கள் பாஸ்கர் மற்றும் பலர் திரண்டு சென்றுள்ளார். 

இந்த நேரத்தில் இவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்படவே, இப்பகுதியை சார்ந்த பாஸ்கர் என்பவர் சமாதானம் செய்துள்ளார். இதனையடுத்து ஆத்திரத்தில் இருந்த ஏழுமலை பாஸ்கரிடம் நீ யார் சமாதானம் செய்ய என்ற கேள்வியை முன்வைத்துள்ளார். 

இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறவே, பாஸ்கரை கீழே தல்லயே ஏழுமலை அடித்து மாடுவெட்டும் கத்தியால் வயிறு மற்றும் நெற்றியில் குத்தியுள்ளார். படுகாயமடைந்து உயிருக்கு போராடிய பாஸ்கரை உறவினர்கள் மீட்டு அங்குள்ள மருத்துவமனையில் அனுமதி செய்தனர். 

இது தொடர்பாக தகவல் அறிந்த காவல் துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து இது குறித்து விசாரணை மேற்கொண்டு ஏழுமலையை கைது செய்து சிறையில் அடைத்தனர். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in thiruvannamalai man attacked relation due to briyani problem


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->