பொங்கலை கொண்டாட வந்த காதல் புதுமண தம்பதியின் விபரீத முடிவு... அலறித்துடித்த அக்கம் பக்கத்தினர்..!!
in thiruvannamalai love couple attempt suicide
தமிழகத்தின் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணி அருகேயிருக்கும் பகுதியில் பொங்கல் கொண்டாட வந்த புதுமண தம்பதியினர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர பிரதேசம் மாநிலத்தில் உள்ள சித்தூர் மாவட்டத்தை சார்ந்தவர் தேவராஜ். இவரது மனைவியின் பெயர் காயத்ரி. இவர்கள் இருவரும் காதலித்து வந்த நிலையில், இருவரும் கடந்த 5 மாதங்களுக்கு முன்னதாக திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
இவர்களின் காதலிற்கு இருதரப்பு பெற்றோர்களும் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து, பெங்களூரில் ஓட்டுநராக பணியாற்றி வந்த தேவராஜ், தனது மனைவியையும் தன்னுடன் பெங்களூருக்கு அழைத்து சென்றுள்ளார்.
தம்பதிகள் இருவரும் பெங்களூரில் வசித்து வந்த நிலையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணியில் இருக்கும் சித்தி சந்திரா என்பவரின் இல்லத்தில் பொங்கலை கொண்டாட வருகை தந்துள்ளனர்.
இந்த நேரத்தில், இன்று காலை தம்பதிகள் இருவரும் வீட்டருகே இருக்கும் மரத்தில் ஒரே சேலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டு பிணமாக தொங்கியுள்ளனர். இதனை கண்டு பெரும் அதிர்ச்சிக்கு உள்ளான பொதுமக்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், இருவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
Tamil online news Today News in Tamil
English Summary
in thiruvannamalai love couple attempt suicide