தாயின் வாழ்க்கையை சீரழித்து., மகளுக்கும் ஆசைப்பட்ட காம கொடூரன்.! தாயின் புத்திசாலித்தனமான செயலால் தாய்க்கு நேர்ந்த சோகம்..!!
in thiruvannamalai illegal affair girl killed police investigation going on
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணி அருகேயுள்ள வெளுக்கனந்தலை பகுதியை சார்ந்தவர் விஜயா. இவரது கணவரின் பெயர் ஞானவேல் சேகர். இவர்கள் இருவருக்கும் மூன்று குழந்தைகள் உள்ள நிலையில்., விஜயா கட்டிட தொழிலாளியாக பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில்., கடந்த சில நாட்களுக்கு முன்னதாக பணிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற விஜயா., நீண்ட நேரம் ஆகியும் மீண்டும் வீட்டிற்கு திரும்பாமல் இருந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த கணவர் மற்றும் குழந்தைகள்., உறவினர்கள் அவரை தேடி அலைந்தனர்.
இவரை எங்கு தேடியும் காணாது பதறிய உறவினர்கள்., இது குறித்து அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இவரின் புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த சமயத்தில்., அங்குள்ள குன்றுமேடு காட்டுப்பகுதியில் விஜயாவின் சடலம் இருந்துள்ளது.
பெண்ணின் சடலம் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே., தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர்., பெண்ணின் தலையில் கல்லைப்போட்டு கொலை செய்திருப்பதாக தெரிவித்துள்ளனர். இதனைதொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில்., விஜயாவுடன் பணியாற்றி வந்த மேஸ்திரியாக சுப்பிரமணியை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
அந்த விசாரணையில்., விஜயாவிற்கும் - சுப்பிரமணியனிற்கும் முறையற்ற உறவானது இருந்த நிலையில்., விஜயாவின் மகளின் மீது காம கொடூரன் சுப்பிரமணியனிற்கு ஆசை வந்துள்ளது. இதனால் விஜயாவின் மகளை திருமணம் செய்து வைப்பது கூறி நடந்த பேச்சுவார்த்தையில். கொடூர தாயும் இதற்கு சம்மதம் தெரிவித்துள்ளாள்.
இந்த நிலையில்., தனது மகளை மற்றொரு ஆணிற்கு திருமணம் செய்து கொடுத்ததை அடுத்து., இவர்களுக்குள் ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக விஜயாவின் தலையில் கல்லை போட்டு கொலை செய்துள்ளதாக காம கொடூரன் வாக்குமூலம் அளித்துள்ளான். இதனையடுத்து காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tamil online news Today News in Tamil
இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் வாட்சப்பில் பெறுவதற்கு
9952958531 என்ற என்னை சேமித்து START என அனுப்பவும்..
இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்
TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்...
English Summary
in thiruvannamalai illegal affair girl killed police investigation going on