மூன்று மாத உல்லாச வாழ்க்கை..! இறுதி முடிவை தேடி ஏரிக்கு சென்ற கள்ளக்காதல் ஜோடிக்கு நேர்ந்த சோகம்..!!
in thiruvannamalai illegal affair couple attempt suicide and died
தமிழகத்தின் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாரை அடுத்துள்ள கோவிலூர் கிராமத்தில் இருக்கும் ஏரியில் சுமார் 25 வயதுடைய ஆண் - பெண் இறந்து பிணமாக கிடந்துள்ளனர். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் இது குறித்து அனக்காவூர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர்., இருவரின் உடலையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இருவரின் உடலையும் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த காவல் துறையினர்., இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ள துவங்கினர். அந்த விசாரணையில்., செய்யாறு தாலுகாவிற்கு உட்பட்ட விளாரிப்பட்டு கிராமத்தை சார்ந்தவர் சுரேஷ். இவரது மனைவியின் பெயர் அகிலா (வயது 24). சுரேஷின் சித்தப்பா மகன் அய்யப்பன்.
சுரேஷின் சித்தப்பா மகனான ஐயப்பனுக்கும் - சுரேஷின் மனைவியான அகிலாவுக்கும் இடையே முறையற்ற பழக்கமானது இருந்துள்ளது. இந்த முறையற்ற பழக்கத்தின் அடிப்படையில் இருவரும் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னதாக வீட்டை விட்டு வெளியேறி நிலையில்., இருவரும் மீண்டும் நேற்றிரவு கோவிலூர் ஏரிக்கரைக்கு வந்து விஷமருந்தி தற்கொலை செய்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பான விசாரணையில் காவல் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கணவனை மீறிய கள்ளக்காதல் மோகத்தால் இன்னும் எத்தனை உயிர்கள் பலியாகவுள்ளதோ என்று எண்ணினாலே உள்ளம் பதறுகிறது..
Tamil online news Today News in Tamil
English Summary
in thiruvannamalai illegal affair couple attempt suicide and died