இளம்பெண்ணை சீரழித்த காவல்துறை அதிகாரி.! மனைவியின் சந்தேகத்தில் வெளியான பேரதிர்ச்சி உண்மை..!!
in thiruvannamalai girl sexual harassment by police
தமிழகத்தின் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வெறையூர் கிராமத்தில் வசித்து வருபவர் மணிகண்டன் (வயது 27). இவர் அங்குள்ள தச்சம்பட்டு காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் நிலையில்., விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மணலூர்பேட்டை பகுதியை சார்ந்த விமலா (வயது 25) என்ற பெண்மணியை கடந்த வருடத்தில் திருமணம் செய்துள்ளார்.
இவர்களின் வாழ்க்கை நல்ல நிலையில் சென்று கொண்டிருந்த நேரத்தில்., மணிகண்டனின் மீது விமலாவிற்கு சந்தேகம் எழுந்துள்ளது. இந்த சந்தேகத்தை உறுதி செய்யும் வகையில் மற்றொரு பெண்ணுடன் மணிகண்டன் தொடர்பில் இருந்து வந்துள்ளார். இதனை அறிந்த விமலாவிற்கும் - மணிகண்டனிற்கும் இடையே கருத்து வெறுப்படைந்து ஏற்பட்டு வந்துள்ளது.
இதனைத்தொடர்ந்து விமலா அங்குள்ள மகளீர் காவல் நிலையத்தில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னதாக புகரொன்றை அளித்துள்ளார். மேலும்., அந்த புகாரில் தனது கணவனுக்கு உள்ள தொடர்பு குறித்தும்., தற்போது அந்த பெண்மணி 8 மாதங்களான கர்ப்பிணியாக இருந்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
புகாரை ஏற்ற காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில்., காவல் அதிகாரி மணிகண்டனின் மீது சுமத்தப்பட்ட குற்றம் உறுதி செய்யப்பட்டதை அடுத்து., தற்போது மணிகண்டனை போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
in thiruvannamalai girl sexual harassment by police