கள்ளகாதல் மோகம்... கொழுந்தனின் கொடூரம்.!! கிணற்றில் பிணமாக மிதந்த பெண் தொடர்பான விசாரணையில் பேரதிர்ச்சி திருப்பம்..!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் திருவண்ணாலை மாவட்டத்தில் உள்ள ஜம்னாமரத்தார் பகுதியை அடுத்துள்ள கீழ்விலாமூச்சி கிராமத்தை சார்ந்தவர் அண்ணாமலை (வயது 45). இவரது மனைவியின் பெயர் மின்னல்கொடி (வயது 40). இவர்கள் இருவருக்கும் இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், அண்ணாமலை சென்னையில் தங்கியிருந்து கூலித்தொழில் செய்து வருகிறார். 

இந்த சமயத்தில், அவ்வப்போது நேரம் கிடைக்கும் நேரத்தில் ஊருக்கு வந்து செல்வதை வழக்கமாக வைத்துள்ளார். மேலும், இவர்களின் குழந்தையும் விடுதிகளில் தங்கியிருந்து பயின்று வந்துள்ளனர். மின்னல்கொடி மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்த நிலையில், கடந்த 27 ஆம் தேதியன்று அப்பகுதியில் இருக்கும் கிணற்றில் மின்னல்கொடி பிணமாக மிதந்துள்ளார். 

இதனைக்கண்டு பெரும் அதிர்ச்சிக்கு உள்ளான அக்கம் பக்கத்தினர், இது தொடர்பாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், மின்னல்கொடியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். பிரேத பரிசோதனையின் அறிக்கையின் முடிவில் மின்னல் கொடி கொலை செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. 

இதனையடுத்து இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில், அண்ணாமலையின் தம்பி சவுந்தர்ராஜனுக்கும் (வயது 30) - மின்னல்கொடிக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. மேலும், மின்னல்கொடி வீட்டில் தனிமையில் இருந்து வந்ததால், இவர்களின் உல்லாச வாழ்க்கை எவ்விதமான பிரச்சனையும் இன்றி நடந்து வந்துள்ளது. 

இந்த விசயமானது நாளடைவில் சவுந்தர்ராஜனின் மனைவிக்கு தெரியவந்ததை அடுத்து, இவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த சவுந்தர்ராஜனின் மனைவி, கள்ளக்காதல் பழக்கத்தை கைவிடக்கூறி இருவரையும் எச்சரித்துள்ளார். இதனால் ஏற்பட்ட அவமானத்தை அடுத்து, கடந்த ஆறு மாத காலமாக கள்ளத்தொடர்பை மின்னல்கொடி கைவிட்டுள்ளார்.  

மேலும், கள்ளக்காதல் தொடர்பை கைவிட இயலாத சவுந்தர்ராஜன் அவ்வப்போது மின்னல்கொடியை உல்லாசத்திற்கு அழைப்பு விடுத்தாலும், மின்னல் கொடி தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வந்துள்ளார். இந்த சமயத்தில், சம்பவத்தன்று தனியாக வந்த மின்னல்கொடியை இடைமறித்து ஆசைக்கு இணங்க சவுந்தர்ராஜன் வற்புறுத்தவே, மின்னல் கொடி மறுப்பு தெரிவித்தால் அவரது முதுகில் கல்லைக்கட்டி கிணற்றில் தள்ளி கொலை செய்தது தெரியவந்துள்ளது. இதன்பின்னர் சவுந்தர்ராஜனை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in thiruvannamalai girl murder due to illegal affair


கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?




Seithipunal
--> -->