கள் இறக்கிய தந்தை.. 13 வயது சிறுமியை விசாரணைக்கு அழைத்து சென்ற கொடூரம்.. தி.மலையில் அதிர்ச்சி.!! - Seithipunal
Seithipunal


திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தண்டராம்பட்டு அடுத்துள்ள கிருஷ்ணாபுரம் பகுதியை சார்ந்த இடத்தில கள் இறக்கி விற்பனை செய்து வருவதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். 

இந்த ஆய்வுக்கு பின்னர் மேற்கொண்ட விசனறயில், இப்பகுதியை சார்ந்த நபரொருவர் கள் இறக்கியது தெரியவந்துள்ளது. இதனையடுத்து கள்ளை இறக்கிய நபரின் இல்லத்திற்கு சென்ற காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

அப்போது கள் இறக்கிய நபர் வீட்டில் இல்லாததை அடுத்து, வீட்டில் இருந்த அவரின் 13 வயது மகளை காவல் துறையினர் அழைத்து சென்றுள்ளனர். சிறுமியை அங்குள்ள கிராம நிர்வாக அலுவலகரின் கட்டிடத்திற்கு அருகேயுள்ள வீட்டில் வைத்து விசாரணை செய்துள்ளனர். 

பின்னர் சிறுமியை கிராம நிர்வாக அலுவலரிடம் ஒப்படைக்க கூறி காவல் ஆய்வாளர் உத்தரவிட்டு சென்று கூறியதாக கூறப்படுகிறது. இந்த விஷயத்தை அறிந்த அப்பகுதி மக்கள் கண்டனம் தெரிவிக்கவே, இது குறித்து தகவலறிந்து வந்த உயர் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணை செய்ய வந்த காவல் துறையினர், சிறுமியை அழைத்து சென்று விசாரணை செய்தது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in thiruvannamalai girl investigate by police without permission


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->