14 வயது சிறுமியை கர்பிணியாக்கிய 59 வயது வயோதிகன்.. இயற்கை உபாதையை கழிக்க சென்ற சிறுமிக்கு அரங்கேறிய சோகம்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செய்யாறு பகுதியை சார்ந்த 14 வயதுடைய சிறுமி பெற்றோருடன் தங்கியிருந்து வருகிறார். இவர் அங்குள்ள அரசு பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு பயின்று வருகிறார். 

இப்பகுதியை சார்ந்த லாரி ஓட்டுநர் கஜேந்திரன் (வயது 59). கடந்த ஜனவரி மாதத்தின் போது சிறுமி இயற்கை உபாதையை கழிக்க தனியாக சென்றுள்ளார். இவரை கவனித்த காமுகன் கஜேந்திரன், சிறுமியை தூக்கி சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். 

பின்னர் இது தொடர்பாக யாரிடமும் தெரிவித்தால் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டியுள்ள நிலையில், இதனால் பயந்துபோன சிறுமி யாரிடமும் கூறாமலேயே இருந்து வந்துள்ளார். மேலும், எந்த சமயத்திலும் சோர்வாகவே இருந்து வந்துள்ளார்.

இவரது உடல்நலம் தொடர்ந்து மோசமடைந்து வந்ததை கண்டு சந்தேகத்திற்கு உள்ளான பெண்ணின் தாயார் விசாரித்ததில், சிறுமி கண்ணீருடன் தனக்கு நடந்ததை கூறியுள்ளார். இதனால் சிறுமியின் தாயார் செய்வதறியாது அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று சோதனை செய்துள்ளார். 

இந்த சோதனையில் சிறுமி இரண்டு மாத கர்ப்பிணியாக இருப்பது தெரியவந்ததை அடுத்து, இது குறித்து அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் கஜேந்திரனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in Thiruvannamalai child girl sexual abuse pregnant police arrest culprit


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->