திருவண்ணாமலை கருக்கலைப்பு காட்டேரி ஆனந்தி மீண்டும் அராஜகம்.! காவல்துறையினர் விசாரணையில் பகீர்.!!
in thiruvannamalai abortion gang arrest by police
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வேங்கிக்கால் பகுதியில் இருக்கும் ஒரு ஸ்கேன் மையத்தில் குழந்தைகளின் பாலினத்தை கண்டறிந்து கருக்கொலை செய்வதாக சென்னை சுகாதார துறையினருக்கு தகவலை கிடைத்ததை அடுத்து., அதிரடியாக திட்டமிட்டு காவல் துறையினரின் உதவியுடன் கைது செய்தனர்.
அந்த ஸ்கேன் மையத்தை நடத்திவரும் மருத்துவர் ஆனந்தி., அவரது கணவர் மற்றும் இந்த கருக்கலைப்பிற்கு புரோக்கராக பணியாற்றிய ஆட்டோ ஓட்டுநர் சிவகுமார் என்பவர்களை கைது செய்து தொடர் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
மருத்துவர் என்று கூறிக்கொண்ட ஆனந்தி மருத்துவரே இல்லை என்பதும் அவர் பன்னிரண்டாம் வகுப்பில் ஸ்கேன் மையம் நடத்தி வந்து கருக்கொலைகள் செய்ததும் தெரியவந்தது. அவரிடம் மேற்கொண்ட தொடர் விசாரணையில்., கடந்த 20 வருடங்களில் சுமார் 19 ஆயிரம் பிஞ்சுகளை கொடூரமாக கருக்கொலைகள் செய்தது தெரியவந்தது.
மேலும் இது போன்ற காரியத்தில் ஈடுபட்டதன் காரணமாக ஏற்கனவே காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு., சிறையில் இருந்து ஜாமினில் வெளியான பின்னர் திருவண்ணாமலை பகுதியில் ஸ்கேன் மையம் அமைத்து இது போன்ற கொலைகளை செய்து வந்தது தெரியவந்தது. இந்த நிலையில்., இது போன்ற கொடூரத்தை மீண்டும் தற்போது செய்து வருவதாக காவல் துறையினருக்கு தகவல் தெரியவந்துள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக நிபந்தனை ஜாமினில் வெளியான ஆனந்தியை காவல்துறையினர் கண்காணித்து வந்த நிலையில்., திருவண்ணாமலை செங்குட்டுவன் தெருவில் இருக்கும் வீட்டில் சட்டவிரோத கருக்கலைப்பு சம்பவம் மற்றும் கருவில் உள்ள குழந்தை ஆணா? பெண்ணா? என்பது தொடர்பான தகவல் கூறுவதாகவும்., பிற மாவட்டங்களுக்கு சென்று கருக்கலைப்பு சம்பவத்தில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்துள்ளது.
இதனைத்தொடர்ந்து ஆனந்தியின் இல்லத்தில் அதிரடி சோதனை மேற்கொண்ட நிலையில்., சட்டவிரோதமாக மீண்டும் கருக்கலைப்பு சம்பவத்தில் ஈடுபட்டதும்., நவீன தொழில்நுட்ப கருவவிகள் போன்றவை வைத்திருப்பதும்., ஆனந்திக்கு உடந்தையாக இருந்த நவீன்குமார் (வயது 20) இளைஞரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும்., இருவரின் மீதும் குண்டர் சட்டம் இரண்டாவது முறையாக பதியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Tamil online news Today News in Tamil
English Summary
in thiruvannamalai abortion gang arrest by police