கள்ளகாதலனுடன் உல்லாசத்தை அனுபவித்த போது கண்டுகொண்ட கணவன்.! கணவனுக்கு துடிதுடிக்க பால் ஊற்றிய சோகம்.!!
in thiruvalur district wife killed her husband due to illegal affair
திருவள்ளுர் மாவட்டத்தை அடுத்துள்ள திருநின்றவூரை சார்ந்த கொசவன்பாளையத்தை சார்ந்த கூவம் ஆற்றங்கரையில் கடந்த 14 ம் தேதியன்று ஆண் சடலம் ஒன்று கிடப்பதை அப்பகுதி வாசிகள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர்., அந்த பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக்க மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும்., இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொள்ள துவங்கினர். அந்த விசாரணையில்., கொலையான நபரை திருநின்றவூர் செங்கல் சூளையில் பணியாற்றும் மணிகண்டன் (வயது 20)., பூமிநாதன் மற்றும் ஐய்யனார் (வயது 27) ஆகியோர் மது போதையில் உடலை கொண்டு வந்து புதைத்தது தெரியவந்தது.
இதனை அந்த காவல் துறையினர் அவர்களை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில்., காஞ்சிபுரம் மாவட்டம் கூடுவாஞ்சேரியில் உள்ள வள்ளலார் நகரை சார்ந்தவர் குமாரின் மனைவி செல்வி (வயது 35). அதே பகுதியை சார்ந்தவர் மணிகண்டன் (வயது 20). குமாரின் மனைவி செல்விக்கும் மணிகண்டனிற்கும் தகாத பழக்கமானது இருந்து வந்துள்ளது.
இதனை அறிந்த குமார் தனது மனைவியை கண்டித்துள்ளார்., இதனை அவர் ஏற்க மறுத்து தகாத பழக்கத்தை கை விடாமல் தொடர்ந்து வந்துள்ளார். இதனை அறிந்த குமார் தனது மனைவி மற்றும் மூன்று குழந்தைகளுடன் கூடுவாஞ்சேரியில் வீடு எடுத்து குடியேறியுள்ளார். புதிய இடத்திற்கு சென்றாலும் செல்வி தொடர்ந்து அலைபேசியில் பேசிக்கொண்டு வந்துள்ளார்.
மேலும்., அலைபேசியில் பேசிக்கொண்டு வந்த இவர்கள் ஒரு நாள் இல்லத்தில் உல்லாசம் அனுபவித்து கொண்டு இருப்பதை குமார் பார்த்துள்ளார். இதனை அறிந்த அவர் தனது மனைவியிடம் தகராறு செய்யவே., அவரை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். அதன் படி கடந்த 10 ம் தேதியன்று பாலில் தூக்கமாத்திரையை கலந்து வழங்கிய பாலை குடித்த குமார் உறங்கியதும்., தனது கள்ளகாதலனுக்கு அலைபேசியில் தொடர்பு கொண்டு கூறியுள்ளார்.
இதனை அறிந்த மணிகண்டன் தனது கூட்டாளியுடன் செல்வியின் இல்லலத்திற்கு வந்து கழுத்தை நெரித்து கொலை செய்து சடலத்தை கூவம் ஆற்றங்கரையில் புதைத்து தெரியவந்தது. அதற்கு பின்னர் மணிகண்டன், செல்வி மற்றும் அவரது குழந்தைகளை செங்கல் சூளைக்கு அருகில் உள்ள கட்டிடத்தில் குடியமர்த்தியது தெரியவந்தது.
இதனையடுத்து செல்வி., மணிகண்டன்., ஐய்யனார் மற்றும் பூமிநாதன் ஆகியோரை கைது செய்து சிறையிலடைத்தனர்.
English Summary
in thiruvalur district wife killed her husband due to illegal affair