பணியின் போது சாம்பார் சாதம் சாப்பிட்ட ஊழியர்கள் அடுத்தடுத்து மயக்கம்.. வாந்தி..! சோதனையில் சிக்கிய பேரதிர்ச்சி.!!
in thiruvalur car factory workers admit hospital due to poison of food
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஊத்துக்கோட்டை ஓதம்பை கிராமத்தில் கார் உதிரி பாகங்கள் தயார் செய்யும் நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்தில் ஷிப்ட் முறையில் சுமார் 200 க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர்.
இந்த நிலையில், இங்கு பணியாற்றும் ஊழியர்களுக்கு நிறுவனத்தின் சார்பாக உணவுகள் வழங்கப்படுவது வழக்கமாக இருந்துள்ளது. இந்த நிறுவனத்தில் நேற்று இரவு பணியானது வழக்கம்போல துவங்கியுள்ளது.
பின்னர் பணியில் இருந்த பணியாளர்கள் உணவு இடைவெளியின் போது சாப்பிட்டு தங்களின் பணியை மீண்டும் தொடரவே, தீடீரென சுமார் 49 ஊழியர்களுக்கு வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து இவர்கள் அனைவரும் அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்ட நிலையில், சிலர் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளித்துக்கொண்டு வரும் நிலையில், இவர்கள் சாப்பிட்ட சாம்பார் சாதத்தில் பல்லி இறந்து கிடந்துள்ளது தெரியவந்துள்ளது. இதனையயடுத்து இது தொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் ஊழியர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
in thiruvalur car factory workers admit hospital due to poison of food