ஒரேயறையில் நண்பர்களாக இருந்து, பிரச்சனையில் அரங்கேறிய கொடூர கொலை..! சென்னையில் பகீர்.!!
in thiruvallur murder police investigation
தமிழகத்தின் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள வேப்பம்பட்டு பகுதியை சார்ந்தவர் முரளி (வயது 24). இவரது நண்பர்களின் பெயர் சிம்சன்., சுப்பிரமணி., அரவிந்தன். இவர்கள் மூன்று பெரும் மதுரவாயிலில் இருக்கும் ஐயப்பா நகர் பகுதியில் தங்கியிருந்து டைல்ஸ் ஊட்டும் பணியை மேற்கொண்டு வந்துள்ளனர்.
இந்த நிலையில்., கடந்த 12 ஆம் தேதியன்று முரளியின் பணப்பை மாயமாகியுள்ள நிலையில்., அதில் ரூ.1,500 மற்றும் ஏ.டி.எம் கார்டு இருந்த நிலையில்., இது குறித்து முரளி சிம்சனிடம் வினவியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே ஆத்திரம் ஏற்பட்டுள்ளது.
இவர்கள் இருவரையும் சுப்பிரமணி மற்றும் அரவிந்த் சமாதானம் செய்த நிலையில்., இரவு மது போதையில் இருந்த முரளி மீண்டும் பிரச்சனையை துவக்கியுள்ளார். இதனையடுத்து முரளி தூங்க சென்ற நிலையில்., ஆத்திரத்தில் இருந்த சிம்சன் நண்பன் முரளியை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்.
இதனால் இரவு முழுதும் உறங்காமல் இருந்து அதிகாலை 3 மணிக்கு அயர்ந்து உறங்கிக்கொண்டு இருந்த முரளியின் தலையில் கல்லை தூக்கி போட்டுவிட்டு தலை நசுங்கி முரளி இறந்தவுடன் சம்பவ இடத்தில் இருந்து தப்பி சென்றுள்ளார்.
இது குறித்த தகவலை அறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை மேற்கொண்டதில் முரளியுடன் இருந்த சுப்பிரமணி மற்றும் அரவிந்திடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில்., பேருந்தில் பண்ரூட்டிக்கு சென்று கொண்டு இருந்த சிம்சனை கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
in thiruvallur murder police investigation