நான்கு வயது சிறுமியை பலாத்காரம் செய்து கொலை செய்த கொடூரன்.! விசாரணையில் அடுத்தடுத்து வெளியான பேரதிர்ச்சி தகவல்.!!  - Seithipunal
Seithipunal


திருவள்ளூர்  மாவட்டத்தில் உள்ள திருமுல்லைவாயால் பகுதியை சார்ந்தவர் மீனாட்சி சுந்தரம் (வயது 60). இவர் இராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற அதிகாரி ஆவார். இவரது வீட்டிற்கு அருகியிலே தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றும் நபர் அவரது மனைவி மற்றும் மகன்., நான்கு வயதுடைய மகளுடன் வசித்து வருகிறார். 

இந்த நிலையில்., நேற்று முன்தினம் மாலையின் போது தன்னுடைய மகனை டியூஷனில் விடுவதராக தாயார் சென்றுவிட்ட நிலையில்., நான்கு வயதுடைய குழந்தை மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளது. இந்த சமயத்தில்., மகனை டியூஷனில் விட்டுவிட்டு வீட்டிற்கு வந்த சமயத்தில் தனது மகள் வீட்டில் இருந்து மாயமாகியுள்ளதை அறிந்துள்ளார். 

அங்குள்ள அக்கம் பக்கத்தில் குழந்தையை தேடி அலைந்த அவர் உடனடியாக இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இவர் காவல் நிலையத்திற்கு சென்று வந்த பின்னர் வீட்டை சுற்றி தனது மகளை தேடி அலைந்த நிலையில்., சாக்குமூட்டையில் இரத்தம் வடிந்துள்ளது. 

இதனை கண்டு பதறிப்போன பெண்மணி அலறியபடியே சாக்குமூட்டையை பிரித்த சமயத்தில் தனது மகள் பிணமாக கிடப்பதை கண்டு கதறியழுதுள்ளார். இவரின் அலறல் சத்தம் கேட்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் விரைந்ததை அடுத்து விஷயம் தெரியவந்துள்ளது. 

இதனையடுத்து காவல் துறையினருக்கு இது குறித்து தகவல் தெரிவித்த நிலையில்., சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணையை மேற்கொள்ள துவங்கினர். இந்த சமயத்தில் குழந்தையின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த நிலையில்., குழந்தை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. 

இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில்., அதே பகுதியை சார்ந்த முன்னாள் இராணுவ வீரரிடம் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில்., சம்பவத்தன்று குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்ததும்., குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்த பின்னர் குழந்தை உண்மையை வெளியே சொல்லிவிடும் என்று எண்ணி அவரது மனைவியுடன் சேர்ந்து குழந்தையை கொலை செய்தது தெரியவந்தது. இது தொடர்பான விசாரணையில் காவல் துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in thiruvallur girl rapped case police investigation report


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->