பந்தை எடுக்க சென்ற 2 வயது குழந்தையின் மீது ஏறிய வேன்.! துடிதுடித்து உயிரிழந்த குழந்தை.!! திருவள்ளூரில் பெரும் சோகம்.!! - Seithipunal
Seithipunal


இந்த உலகம் முழுவதும் விபத்துகள் என்பது தொடர்கதையாகியுள்ளது. தினமும் அரங்கேறி வரும் பல்வேறு விபத்துகளில் சிக்கி பலரும் பரிதாபமாக பலியாகி வருவது பெரும் சோகத்தை ஏற்படுத்துகிறது. மேலும்., இவ்வாறான விபத்துகளில் பச்சிளம் குழந்தைகள் சிக்கி உயிரிழப்பது தொடர்ந்து வருகிறது. 

தமிழகத்தின் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பெரியர்பாளையம் அருகேயுள்ள வெங்கள் காலனி பகுதியை சார்ந்தவர் பிரசாந்த். இவரது மகனின் பெயர் ரோகித் (வயது 2). ரோகித் நேற்று வீட்டின் முன்னர் விளையாடிக்கொண்டு இருந்துள்ளான்.

இந்த நேரத்தில்., அங்குள்ள சீத்தஞ்சேரியில் இருந்து வெண்கள் நோக்கி சென்று கொண்டு இருந்த வேனானது வந்துகொண்டு இருந்தது. சிறுவன் பந்தை வைத்த விளையாடிக்கொண்டு இருந்த நிலையில்., பந்து சாலையில் உருண்டு சென்றது சிறுவன் தவழ்ந்து எடுக்க சென்றுள்ளான். 

died, suicide attempt, murder, killed,

இந்த தருணத்தில் கண்ணிமைக்கும் நேரத்தில் வேன் சிறுவனின் மீது மோதியதில்., குழந்தை சம்பவ இடத்திலேயே சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தான். இந்த தகவல் குறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும்., விபத்தை ஏற்படுத்திவிட்டு சென்ற ஓட்டுனரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in thiruvallur child died van driver search by police


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->