குளிக்க வைத்த வெண்ணீர் அண்டாவில் தவறி விழுந்து துடிதுடித்து உயிரிழந்த சிறுமி.. பெற்றோர்களே கவனமாக இருங்கள்...!! - Seithipunal
Seithipunal


திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பெரியபாளையம் அருகேயுள்ள தலையாரி தெருப்பகுதியை சார்ந்தவர் கஜேந்திரன். இவரது மனைவியின் பெயர் குப்பம்மாள். இவர்கள் இருவருக்கும் நான்கு வயதுடைய நித்யஸ்ரீ என்கிற மகள் உள்ளார். 

இந்நிலையில், தினமும் குப்பம்மாள் தனது மகளை வெந்நீரில் குளிக்க வைப்பதை வழக்கமாக வைத்துள்ளார். குளித்து முடித்த பின்னர், சிறுது நேரம் அமரவைத்து சிறுமிக்கு மசாஜ் செய்தும் வந்துள்ளார். 

இந்த நிலையில், இன்று வழக்கம்போல வெண்ணீரை கொண்டு வந்து குளியல் அறையில் இருக்கும் அண்டாவில் ஊற்றியுள்ளார். பின்னர் சமயலறைக்கு சென்று கியாஸை நிறுத்த சென்ற வேலையில், விளையாண்டுகொண்டு இருந்த சிறுமி வெந்நீர் அண்டாவில் எதிர்ப்பாராத விதமாக விழுந்துள்ளார். 

baby died,

வெந்நீரின் சூடு தாங்காது சிறுமி அலறித்துடித்த நிலையில், இவரின் சத்தம் கேட்டு பதறியபடி வந்த குப்பம்மாள் தனது மகளை மீட்டு சென்னை கீழ்பாக்கம் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதி செய்த்தனர். 

மருத்துவமனையில் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விஷயத்தை அறிந்த காவல் துறையினர் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in thiruvallur child died slipped boiled water


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->